
அணியின் வீரர்
அதன் பின்னர் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகி.. தோனி, அணியில் ஒரு வீரராக களமாடி வருகிறார். கேப்டன் பதவியில் இல்லை என்றாலும், கேப்டன் கோலி, தோனியின் ஆலோசனைகளை கேட்கிறார்.

ஓய்வுக்கான வாய்ப்பு
இந்த உலக கோப்பையுடன் தோனி ஓய்வுபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே அவரது சொந்த ஊரான ராஞ்சியில் நேற்று ஆடிய போட்டிதான் அவரது கடைசி போட்டியாக இருக்கும்.

பெயர் சூட்டல்
அந்த வகையில், ராஞ்சி கிரிக்கெட் மைதானத்தில் பெவிலியனுக்கு தோனியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட் செய்தது.

ரன் அவுட்
மேக்ஸ்வெல்லை வழக்கம்போல தனது சமயோசித புத்தியால் அபாரமாக ரன் அவுட் செய்தார் தோனி. 314 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி தோல்வி அடைந்தது.
வரவேற்பு
3 விக்கெட்டுகளுக்கு பிறகு களத்திற்கு வந்தார் தோனி. தோனி பெவிலியனில் இருந்து மைதானத்திற்கு வரும்போது ராஞ்சி ரசிகர்கள், அரங்கமே அதிரும் அளவிற்கு உற்சாக வரவேற்பளித்தனர். அந்த வீடியோவை பிசிசிஐ டுவிட்டரில் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











