For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நோ பால் வீசியவர்களுக்கு அபராதம் போட்ட ரஞ்சி அணி பயிற்சியாளர்.. யாருப்பா அவரு?

விதர்பா : விதர்பா அணி சமீபத்தில் ரஞ்சி தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இது அந்த அணியின் இரண்டாவது ரஞ்சி தொடர் வெற்றியாகும்.

விதர்பா அணி தொடர்ந்து இரு ஆண்டுகளாக வெற்றி பெற்றுள்ள நிலையில், அதன் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் தனி கவனம் பெற்றுள்ளார். அவர் பந்துவீச்சாளர்களை கட்டுப்படுத்தும் முறை ஒன்று அவர் எந்த மாதிரியான பயிற்சியாளர் என கூறும் வகையில் அமைந்துள்ளது.

நோ பால் வீசினால் தண்டனை

நோ பால் வீசினால் தண்டனை

சந்திரகாந்த் பண்டிட் பந்துவீச்சாளர்கள் நோ பால் வீசாமல் இருக்க வேண்டும் என்பதில் மிக கண்டிப்பாக இருப்பார் என கூறப்படுகிறது. அதனால், எந்த பந்துவீச்சாளர் நோ பால் வீசுகிறாரோ அவருக்கு அபராதம் விதிக்கிறார் பண்டிட்.

ரூ.1000 அபராதம்

ரூ.1000 அபராதம்

இது பற்றி விதர்பாவின் ரஞ்சி அணி கேப்டன் பைசல் கூறுகையில், நோ பால் வீசினால் ரூ.500, நோ பால் பந்தில் விக்கெட் விழுந்தால் ரூ.1000 என நோ பால் வீசும் பந்துவீச்சாளர்களுக்கு அபராதம் விதிப்பார் என சந்திரகாந்த் குறித்து கூறினார்.

சான்று இது தான்

சான்று இது தான்

சந்திரகாந்த்தின் அபராதம் விதிக்கும் முறை சரியாக வேலை செய்துள்ளது என்பதற்கு சான்றாக விதர்பா தொடர்ந்து இரு முறை ரஞ்சி தொடரை வென்று காட்டியுள்ளது.

சந்திரகாந்த் பண்டிட் வெற்றிகள்

சந்திரகாந்த் பண்டிட் வெற்றிகள்

மும்பையை சேர்ந்த சந்திரகாந்த் பண்டிட் 1983-84, 1984-85 ஆகிய ஆண்டுகளில் ரஞ்சி வென்ற மும்பை அணிக்காக ஆடியுள்ளார். மேலும், பயிற்சியாளராக ஆறு முறை ரஞ்சி தொடர் வென்று கொடுத்துள்ளார். இந்தியாவின் முன்னணி ரஞ்சி பயிற்சியாளராக அறியப்படுகிறார் இவர்.

Story first published: Sunday, February 10, 2019, 12:48 [IST]
Other articles published on Feb 10, 2019
English summary
Ranji Trophy 2018-19 : Vidarbha coach fined the bowlers for no balls
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X