
கடும் விமர்சனம்
சமீபத்தில் இங்கிலாந்து சென்ற பாபர் அசம் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு ஒரு வெற்றி கூட கிடைக்கவில்லை. டி20, ஒருநாள் என்று ஒயிட் வாஷ் (மழையால் ஒரு போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை) ஆகி வந்திருக்கிறது. இதனால், ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் ஆர்வலர்கள் என்று அனைத்து தரப்பிலும் இருந்து அணி மீதும், வீரர்கள் மீதும், அவர்களின் செயல்பாடுகள் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

பதில் சொல்லுங்க
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் ரஷீத் லத்தீஃப் ஒரேயொரு கேள்வியை எழுப்பியுள்ளார். அதுவும் சுருக்கமாக நறுக்கென்று. அவர் கேட்கிறார், "ஏன், சர்ஃபரஸ் அகம துவைகேப்டன் பதவியில் இருந்தும், மைக்கே ஆர்த்ரை கோச் பதவியில் இருந்தும் நீக்கினீர்கள்?" என்று. அவ்வளவு தான். இவர்களை இருவரையும் அவசரப்பட்டு நீக்கி பெரும் தவறை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இழைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

ரெக்கார்டை பாருங்கள்
"மிக்கி ஆர்தர் ஏன் நீக்கப்பட்டார்?.. அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கான காரணம் என்ன? அணி அவருக்கு கீழ் சிறப்பாக செயல்பட்டது, அணி நன்றாக முன்னேறி வந்தது. ரெக்கார்டுகளை எடுத்துப் பாருங்க. நீங்கள் அதனை பார்க்க முடியும், ஆனால் அவர் அரசியல் காரணமாகவே நீக்கப்பட்டார்" என்று லத்தீப் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.

பெஞ்ச் பலத்தை கூட
2017 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றுக் கொடுத்தவர் சர்ஃபராஸ் அகமது. பாகிஸ்தானை அந்த பட்டத்தை வெல்ல சர்ஃபராஸ் மற்றும் ஆர்தர் முக்கிய காரணமாக இருந்தனர். இருவரும் அணியில் இருந்து நீக்கப்பட்ட பிறகே, பாகிஸ்தான் நிலைமை படுமோசமானது. இது பாகிஸ்தான் வாரியத்துக்கு பெரும் இழப்பாகும். நான் மிஸ்பா-உல் ஹக்கைக் குறை கூறவில்லை, ஒருவேளை அவர் தலைமை பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை என நினைக்கிறேன். அவர் இளமையாகவும் பயிற்சியாளராக அனுபவமற்றவராகவும் இருக்கிறார். இன்று நாம் ஒருநாள் தொடரில் மோசமாக இரண்டாம் தர இங்கிலாந்து அணியிடம் தோற்றிருக்கிறோம், அதாவது இங்கிலாந்தின் பெஞ்ச் பலத்தை வெல்ல எங்கள் கிரிக்கெட் போதுமானதாக இல்லை" என்று தனது வேதனையை கொட்டியிருக்கிறார் (இருக்காதா பின்ன!! என்னா அடி!!)


Click it and Unblock the Notifications











