
லண்டன்: இங்கிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் குல்தீப் யாதவை சேர்த்தது தவறுதான் என்று ஒப்புக்கொண்டுள்ளார் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. அப்போட்டியில் இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆனால் அந்த போட்டியில் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. குல்தீப் யாதவை அணியில் சேர்த்தது தவறான முடிவு என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. ஏனென்றால் லார்ட்ஸ் ஆடுகளம் முழுவதும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக அமைந்தது.
