மும்பை: யோ யோ தேர்வு தேவையில்லை என்று நினைப்போர் அணியில் ஆடுவது குறித்து நினைத்துக்கூட பார்க்க தேவையில்லை. அவர்கள் போய்க் கொண்டே இருக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் மேலாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.
யோ யோ தகுதி தேர்வு அணிக்கு தேவையான ஒன்று என இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது: வீரர்கள் சரியான உடல்தகுதியுடன் இருந்தால் மட்டுமே களத்தில் சிறப்பாக செயல்பட முடியும். யாராவது இது தேவையில்லை என கூறினால் அவர்கள் தாராளமாக போகலாம்.
