
இந்திய அணி
ரோகித் சர்மா தலைமையிலான இந்த முறை புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஒவ்வொரு பேட்ஸ்மேனும் தனது முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும் என்றும் இந்தியாவின் செயல்பாடு இனி ஆக்ரோஷமானதாக தான் இருக்கும் எனவும் ரோகித் சர்மா அறிவித்தார். அதன்படி தான் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் செயல்பட்டனர்.

ரசிகர்கள் குழப்பம்
இதுபோன்று அதிரடியாக விளையாடுவதினால் தொடர்ச்சியாக விக்கெட்கள் சரிந்து சொதப்புவதற்கு வாய்ப்புள்ளதாக வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இதே போல செயல்பாட்டை தான் வெஸ்ட் இண்டீஸ் அணி வழக்கமாக செயல்படுத்தும். ஆனால் பலமுறை அவர்கள் சொதப்பியுள்ளனர். இதனால் ஆசிய கோப்பையில் என்ன ஆகப்போகிறது என ரசிகர்கள் குழம்பியுள்ளனர்.

ரவிசாஸ்திரி ஐடியா
இந்நிலையில் இதுகுறித்து முன்னாள் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில்,
இந்தியா தனது அணுகுமுறையை மாற்றக்கூடாது. நான் பயிற்சியாளராக இருந்த போதும், அதிரடி காட்ட வேண்டும் என்று தான் திட்டமிட்டு வந்தோம். சில போட்டிகளில் தோற்கலாம். ஆனால் இந்த அணுகுமுறையில் வெற்றி பெற்றுவிட்டால், பெரிய தொடர்களில் இதே திட்டத்தை செயல்படுத்தலாம்.

கோலியால் முடியுமா?
ஓய்வில் இருந்து வந்துள்ள கே.எல்.ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோரும் அதிரடி காட்ட முடியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ரவிசாஸ்திரி, ஏன் அவர்களால் முடியாது. அவர்கள் இருவரும் ஐபிஎல் மற்றும் டி20ல் அதிக அனுபவம் உள்ளவர்கள். இதில் சிறிய மாற்றத்தை செய்வது அவர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்காது. இதனால் நல்ல ஸ்கோர் கிடைக்கும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்


Click it and Unblock the Notifications