
நேர்காணல்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் மும்பையில் நேற்றுமுன்தினம் இந்திய கிரிக்கெட் அறிவுரை குழு தேர்வு நடத்தியது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோஹ்லியுடன் ஆலோசித்து முடிவு அறிவிக்கப்படும் என்று அந்த குழுவின் உறுப்பினர் கங்குலி தெரிவித்தார்.

இன்று அறிவிப்பு
இதைத் தொடர்ந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரரான அவர் ஒரு ஆல்-ரவுண்டர் ஆவார். மேலும் வலதுகை பேட்டிங்கும், இடது கை சுழல் பந்தும் வீசுவார்.

மும்பையில் பிறந்தார்
மும்பையில் கடந்த 1962-ஆம் ஆண்டு மே 27-ஆம் தேதி பிறந்த அவரது முழு பெயர் ரவிசங்கர் ஜெயதிரிதா சாஸ்திரி. 18 வயதில் சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்து 12 ஆண்டுகள் வரை நீடித்தார். அவர் ஆரம்பத்தில் பந்து வீச்சாளாராக பயணத்தை ஆரம்பித்தார். ஆனால் படிப்படியாக பேட்ஸ்மேனாக உருவாகி, அதிகத் திறமையுடனும் பந்தும் வீசக்கூடியவராகவும் உருவெடுத்தார்.

சாப்பாத்தி அடி
அவரது பேட்டிங் ஸ்டைலை சப்பாத்தி அடி என கூறுவார்கள். மணிக்கட்டை சுழற்றி ஆடுவது அவரது அடையாளமாக இருந்தது. இதனால் அவர் சுழற்பந்து வீச்சுகளை திறமையாக கையாண்டார். பெரும்பாலும் சாஸ்திரி தொடக்க ஆட்டக்காரராகவோ அல்லது நடுநிலை வரிசையிலோ களம் இறங்குவார்.

சாதனையை சமன் செய்தார்
1985- ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் வேர்ல்ட் சாம்பியன்ஷிப் ஆப் கிரிக்கெட்டின் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸில் தேர்வானது முக்கியத்துவம் வாய்ந்தது. முதல் தர கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் ஆறு சிக்சர்களை அடித்த மேற்கு இந்தியரான கேரி சோபரின் சாதனையை அதே காலகட்டத்தில் சாஸ்திரி சமன் செய்தார்.


Click it and Unblock the Notifications











