
2,000 விண்ணப்பங்கள்
இதுவரை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர், உதவிப் பயிற்சியாளர், பீல்டிங் பயிற்சியாளர், பேட்டிங், பந்துவீச்சுப் பயிற்சியாளர், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட பல பிரிவுகளுக்கும் ஏறக்குறைய 2 ஆயிரம் விண்ணப்பங்கள் வந்து உள்ளதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவிக்கின்றன.

உண்மை இல்லை
இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்தனா பயிற்சியாளர் பதவி கோரி விண்ணப்பித்து உள்ளார் என்ற செய்தி வந்தது. ஆனால், அதில் உண்மையில்லை என தெரியவந்துள்ளது.

ரவிசாஸ்திரியே தொடருவார்
பிசிசிஐக்கு வந்துள்ள விண்ணப்பங்களில் பயிற்சியாளர் பதவிக்கு தகுதியான நபர்கள் குறைவு. எனவே,கோலியின் விருப்பம், அணியில் 2 ஆண்டுகால செயல்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் ரவி சாஸ்திரியே பயிற்சியாளர் பதவியில் தொடர்வார் என்று பிசிசிஐ தரப்பில் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன.

2021 வரை பயிற்சியாளர்
அதனால் 2021ம் ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை போட்டிவரை இந்திய அணிக்கு பயிற்சியாளராக ரவி சாஸ்திரி தொடர்வார் என்று கூறப்படுகிறது. இந்த இரு ஆண்டுகள் இடைப்பட்ட காலத்தில் ரவி சாஸ்திரி தலைமையில் இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப், டி20 உலக கோப்பை, ஐசிசி ஒருநாள் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கும் என்று தெரிகிறது. அதன் பிறகு உலககோப்பை 2023 வரை பயிற்சியாளராக நீட்டிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரசிகர்கள் அதிருப்தி
ரவி சாஸ்திரியே அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்க முக்கிய வீரர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரசிகர்களும் இந்த விவகாரத்தில் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. அணியில் வீரர்கள் தரப்பில் கோஷ்டி உருவாக இவரே காரணம் என்றும், இதுவரை எந்த முக்கிய கோப்பையையும் அவர் பெற்றுத் தர வில்லை என்று கிரிக்கெட் ஜாம்பவான்கள் பலரும் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











