தொடர்களை வென்றது
ரவி சாஸ்திரி, 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். அவரது தலைமையில், இந்திய அணி டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியது. 2018ம் ஆண்டில் ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களை இந்தியா வென்றுள்ளது.
தோல்வியால் ஏமாற்றம்
ரவி சாஸ்திரி பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி 70 சதவீதத்துக்கு மேல் வெற்றிகளை குவித்துள்ளது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்று வெளியேறியது. அந்த தோல்வி பெரும் விமர்சனங்களை எழுப்பியது.
கிரிக்கெட் ஆலோசனை குழு
இந் நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்ய நியமிக்கப்பட்ட கிரிக்கெட் ஆலோசனை குழு எந்தவொரு வெளிநாட்டினரையும் தேர்ந்தெடுக்க முகாந்தரம் இல்லை என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அது போன்ற சூழ்நிலையில், ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சி யாளராக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஆர்வமாக இல்லை
இது குறித்து கிரிக்கெட் ஆலோசனை குழு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: ரவி சாஸ்திரி தலைமையில் அணி சிறப்பாக செயல்படுகிறது. எனவே, வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க ஆர்வமாக இல்லை.
கிரிஸ்டனுக்கு முன்னுரிமை
ஆனால் கேரி கிர்ஸ்டன் போன்ற ஒருவர் இப்பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் கருத்தில் கொண்டிருப்போம். எங்களை பொறுத்த வரை எப்பொழுதும் இந்திய பயிற்சியாளர்களுக்கு தான் முன்னுரிமை கொடுப்போம்.
வாய்ப்புகள் அதிகம்
தற்போது ரவி சாஸ்திரி மேற்பார்வையில் அணி சிறப்பாக செயல்படும் போது, மாற்றத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்? எனவே, அவரே மீண்டும் தொடருவதற்கே வாய்ப்புகள் அதிகம் என்றனர்.
மாற்றத்தை நோக்கி
பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் அண்மையில் தெரிவித்த கருத்து முக்கியமாக பார்க்கப்படுகிறது. அதாவது, ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடர வேண்டியது அவசியம். ஏனெனில் அணி ஒரு மாற்றத்தை நோக்கி செல்கிறது என்று கூறியிருந்தார்.