
விராட் கோலி விக்கெட்
லோயர் ஆர்டரில் களமிறங்கிய வீரர்கள் கூட அரைசதம் அடித்த சூழலில் நல்ல ஃபார்மில் இருக்கக்கூடிய விராட் கோலி 26 பந்துகளில் வெறும் 12 ரன்களை மட்டுமே அடித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. அதுவும் அறிமுக வீரர் மர்ஃபி விரித்த வலையில் மிகவும் மோசமான முறையில் கோலி ஏமாந்தது தான் தற்போது பிரச்சினையை உருவாக்கியுள்ளது.

என்ன ஆனது?
லெக் சைடில் மர்ஃபி வீசிய ஷார்ட் பந்தை சுலபமாக பின் திசையில் அடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் கோலி பேட்டை நகர்த்தினார். ஆனால் பந்து பவுன்ஸாகாமல் நினைத்ததை விட மிகவும் கீழாக வந்துவிட்டது. இதனால் துரதிஷ்டவசமாக விராட் கோலி அவுட்டானார். இந்த போட்டியில் மெர்ஃபி இதுவரை வீசியதிலேயே மோசமான பந்து என்றால் இதை கூறலாம். ஆனால் இதில் தான் கோலி சரிந்தார்.

ரவிசாஸ்திரி பேச்சு
இந்நிலையில் இதுகுறித்து ரவிசாஸ்திரி பேசியுள்ளார். அதில், கோலிக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று தான் கூறுவேன். லெக்சைட்டில் இதுபோன்று வரும் பந்தை கோலி அதிகம் அடிக்கவே விரும்ப மாட்டார். 50 இன்னிங்ஸ்களில் ஒரு முறை இந்த ஷாட்டை ஆடி இருக்கலாம். அது துரதிஷ்டவசமாக தவறிவிட்டது. இதை அனைத்தையும் மறந்துவிடுங்கள். இதை ஆஸ்திரேலியா நல்லபடியாக பயன்படுத்திக்கொண்டால் சரி. தேவையான நேரத்தில் அதிர்ஷ்டவசமாக கோலியின் விக்கெட் கிடைத்தது என்று நினைத்துக்கொள்ளட்டும் என ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

வீக்னஸ்
கோலி அவுட்டானதை நியாயப்படுத்தினாலும், அவர் ஸ்பின்னர்களுக்கு எதிராக நீண்ட காலமாக தடுமாறி வருவது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. வங்கதேச தொடரில் ஸ்பின்னர்களிடம் சொதப்பிய அவர், நியூசிலாந்து தொடரிலும் மிட்செல் சாண்ட்னரிடம் தடுமாறினார். தற்போது மீண்டும் அதே பிரச்சினை நீடித்து வருவதால் ரசிகர்கள் கவலையடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications