மும்பை: ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் அமைப்பின் தலைவராக மீண்டும் ராஜீவ் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஐபிஎல் நிர்வாகக் குழுவிலிருந்து இந்திய அணியின் இயக்குநராக செயல்படும் ரவி சாஸ்திரி நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல மாற்றங்களையும், நீக்கங்களையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இன்று மும்பையில் கிரிக்கெட் வாரியத்தின் 86வது வருடாந்திர பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.
இதில் முக்கிய முடிவாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் சேர்மன் பதவியிலிருந்து சீனிவாசனை நீக்கி விட்டு அந்த இடத்தில் பிசிசிஐ தலைவர் சஷாங் மனோகரை நியமிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

இதுதவிர பிசிசிஐ கூட்டத்தில் எடுக்கப்பட்ட இதர முடிவுகள்:
சமீபத்தில் மும்பை வாங்கடே மைதான பிட்ச் தொடர்பாக அதன் கியூரேட்டர் சுதிர் நாயக்குடன் ரவி சாஸ்திரி மோதினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரவி சாஸ்திரி மீது பிசிசிஐயிடம் புகார் கொடுத்திருந்தார் கியூரேட்டர் சுதிர் நாயக் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் சாஸ்திரியின் பதவி பறி போயுள்ளது.