
கடினமாக இருக்கிறது
இது குறித்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, யோசித்து பார்க்கவே மிகவும் கடினமாக இருக்கிறது. நிறைய வீரர்களுக்கு இப்போது காயங்கள் ஏற்படுகிறது. நாங்கள் விளையாடிய காலகட்டத்தில் எங்களுக்கு இருந்த வசதிகள் எல்லாம் மிகக் குறைவு. அப்போது கூட நாங்கள் எட்டு முதல் 10 ஆண்டுகள் வரை ஒவ்வொரு வீரரும் விளையாடினோம். ஒவ்வொரு ஆண்டும் 8 முதல் 10 மாதம் வரை கிரிக்கெட் போட்டிகள் விளையாடுவோம்.

ஆலோசனை
ஆனால் இப்போது நிலைமையே வேறு .தொடர்ந்து அதிக அளவில் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அது பற்றி கேள்வியே வேண்டாம். உலகம் முழுவதும் தற்போது லீக் தொடர்கள் நடைபெற்று வருகிறது. இதனால் வீரர்கள் ஓய்வெடுக்கும் நேரம் குறைந்து வருகிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வாரியமும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வீரர் உடன் அமர்ந்து ஆலோசனை மேற்கொள்ள வேண்டும்.

நாடு முக்கியம்
உங்களுக்கு கிரிக்கெட்டும் அதிக அளவில் நடைபெற வேண்டும், அதேசமயம் வீரர்களுக்கு ஓய்வு என்பதும் கொடுக்க வேண்டும். ஐ பி எல் தொடராக இருந்தாலும் சரி கிரிக்கெட் வாரியம் இதில் முக்கிய முடிவு எடுக்க வேண்டும். அணிகளிடம் எங்களுக்கு இந்த வீரர்கள் எல்லாம் இந்திய அணிக்காக தேவை. இந்திய நலனுக்காக சில வீரர்களை ஐபிஎல் லீக் போட்டியில் விளையாட வைக்காதீர்கள் என்று சொல்ல வேண்டும் என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

பிசிசிஐக்கு கோரிக்கை
நாட்டின் நலனுக்காக இந்த முடிவு எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். ஏற்கனவே உலக கோப்பையில் இடம்பெறக்கூடிய ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயம் காரணமாக கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகி இருப்பது இந்திய அணிக்கு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. உலக கோப்பைக்கு இன்னும் சில மாதங்கள் உள்ள நிலையில் வீரர்களுக்கு சரியான முறையில் ஓய்வு வழங்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











