சாஸ்திரி கருத்துகள்
நேர்காணலில் தற்போதைய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பகிர்ந்து கொண்ட கருத்துகள் என்ன என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் பல முக்கிய விஷயங்களை ரவி சாஸ்திரி முன் வைத்ததாகவும், அதுவே அவரது தேர்வுக்கு காரணமாக அமைந்ததாகவும் பிசிசிஐ நிர்வாகி ஒருவர் கூறியுள்ளார்.
தோல்வி ஏன்?
அவர் தரப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: நேர்காணலில் ரவி சாஸ்திரியிடம் இந்திய அணியின் உலக கோப்பை தொடர் தோல்வி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதில் வித்தியாசமானது. அதாவது, இந்தத் தொடரில் ஒரு மோசமான நாள் அணியை மோசமானதாக ஆக்காது என்று தெரிவித்தார்.
கோலி உதாரணம்
அத்துடன் சாஸ்திரி தனக்கு இந்திய அணியில் ஒரு சில வேலைகள் இன்னும் முடியாமல் உள்ளதாக கூறியுள்ளார். கேப்டன் கோலியை அவர் ஏராளமாக புகழ்ந்திருக்கிறார். கேப்டன் கோலி அணியின் வீரர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார் என்று சாஸ்திரி தெரிவித்தார்.
உடற்தகுதி கவனம்
எனவே இத்தகைய கேப்டனை கொண்ட இந்திய அணி மிகவும் சிறப்பு வாய்ந்த அணியாக தான் இருக்கும் என்றும் ரவி சாஸ்திரி தெரிவித்தார். அத்துடன் வீரர்கள் உடற்தகுதியில் கோலி அதிக கவனம் செலுத்துவதால் அணி நல்ல முறையில் உள்ளதாக சாஸ்திரி கூறினார்.
வீரர்கள் திறன்
ரவி சாஸ்திரிக்கு இந்திய அணி வீரர்களின் விளையாட்டு திறன் குறித்து நன்றாக தெரிந்தவர். ஆகையால் அவர் அளித்த பதில்களோடு இதனையும் ஒப்பிட்டு பின்னர் தேர்வு செய்யப்பட்டு விட்டார் என்று கூறினார்.