வாட்சனைத் திட்டுவதா.. ரவீந்திர ஜடேஜாவுக்கு 10 பர்சன்ட் சம்பளம் அபராதம்
துபாய்: ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஷான் நாட்சனை அவதூறாகப் பேசியதற்காக இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு அவரது போட்டிக் கட்டணத்தில் 10 சதவீதம் அபராதம் விதித்துள்ளது ஐசிசி.
பெங்களூரில் நடந்த இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 7வது ஒரு நாள் போட்டியின்போது இந்த சம்பவம் நடந்தது.
ஐசிசியின் நடத்தை விதிமுறைகளின்படி ஜடேஜாவுக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

29வது ஓவரில் பிரச்சினை
ஆஸ்திரேலியாவின் 29வது ஓவரின்போது வாட்சனை அவுட்டாக்கினார் ஜடேஜா. அப்போது அவர் வாட்சனைப் பார்த்து ஏதோ கூறினார்.

அவதூறான வார்த்தை
அப்போது ஜடேஜா, வாட்சனைப் பார்த்து அவதூறான வார்த்தையைப் பிரயோகித்ததாக கூறப்படுகிறது.

குற்றத்தை ஒப்புக் கொண்டார் ஜடேஜா
போட்டியின் முடிவில் தான் அவதூறாகப் பேசியதை ஜடேஜாவும் ஒத்துக் கொண்டார்.மேலும் இதுதொடர்பாகபோட்டி நடுவர் ஆண்டி பைகிராப்ட் பிறப்பித்த தண்டனையையும் அவர் ஏற்றுக் கொண்டார்.

மன்னிப்புகேட்டார்
மேலும் கள நடுவர் நிகல் லாங்கிடமும் அவர் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.


Click it and Unblock the Notifications