
கேப்டன் தேர்வுகள்
கேப்டன்சி ரேஸில் ஃபாப் டூப்ளசிஸ், க்ளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் ஆகியோர் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. இதில் மேக்ஸ்வெல் முதல் சில போட்டிகளில் இருக்க மாட்டார். தினேஷ் கார்த்திக் கேப்டன்சி சரியாக அமையவில்லை. இதனால் டூப்ளசிஸ் தான் அடுத்த கேப்டனாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

கடைசி நேர திருப்பம்
ஆனால் அதிலும் கடைசி நேர ட்விஸ்ட் இருந்தது. விராட் கோலியின் ராஜினாமா கடிதத்தை ஆர்சிபி நிர்வாகம் இன்னும் ஏற்கவே இல்லை எனத்தகவல் வெளியானது. மேலும் ஆர்சிபி வெளியிட்ட விளம்பர உருவங்களும் கோலியின் உருவத்தை போன்றே இருந்தது. இதனால் மீண்டும் கோலி தான் கேப்டனாகிறார் என்ற குஷியில் ரசிகர்கள் உள்ளனர்.

பெங்களூருவில் குவிந்த கூட்டம்
இந்நிலையில் இதுகுறித்த அறிவிப்பை இன்று மதியம் 3.45 மணிக்கு பிரமாண்டமாக வெளியிடுகிறது நிர்வாகம். பெங்களூருவில் உள்ள மியூசியம் சாலையில் இதற்காக பெரிய திரைகள் அமைக்கப்பட்டு, ரசிகர்கள் கூட்டம் குவிந்து வருகின்றன. அனைவரும் கோலிதான் கேப்டன் என நினைத்து உற்சாக குரல் எழுப்பி வருகின்றனர்.
Recommended Video

கோலியின் வீடியோ
இந்த கோஷத்திற்கு ஏற்றார் போலவே கோலி நேற்று ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் ரசிகர்களுக்கு ஒரு இன்ப செய்தி அறிவிக்கப்போகிறேன், புத்துணர்ச்சியுடன் கூடிய ஒரு ஆர்சிபி அணி வரப்போகிறது எனக்கூறினார். இதனால் இன்று இந்தியா - இலங்கை 2வது டெஸ்ட் போட்டியை விட ஆர்சிபி கேப்டன்சி அறிவிப்பு தான் அதிக கவனம் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications