
ரூ. 10 கோடிதான்
ரூ. 10 கோடியில் ஏலம் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்து விட்டது. ஏலம் நடத்தியவரும் சுத்தியலை கீழே வைக்கப் போய் விட்டார். அந்த நேரத்தில் திடீரென கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் புகுந்து விட்டது.

சுத்தியலை வச்சாச்சுன்னா அவ்வளவுதானே...
சுத்தியலை கீழே வைத்து விட்டால் ஏலம் முடிந்தது என்றுதான் நான் நினைத்தேன். அப்படித்தானே அர்த்தம் வரும்.. ஆனால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஏலத்தில் இணைந்ததால் ஏலம் மீண்டும் தொடர்ந்தது. கடைசியில் அது ரூ. 14 கோடியில் போய் நின்று விட்டது.

புகார்
இதுதொடர்பாக நாங்கள் ஆட்சிமன்றக் குழுவிடம் புகார் கொடுத்துள்ளோம். இதுகுறித்து பரிசீலிக்குமாறும் கேட்டுள்ளோம். பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறோம் என்றார் மல்லையா.

திருப்திதான்
மற்றபடி முதல் நாள் ஏலத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்குக் கிடைத்த வீரர்கள் குறித்து மல்லையா திருப்தி தெரிவித்துள்ளார். யுவராஜ் சிங் அருமையான வீரர். அவர் கிடைத்ததற்காக மகிழ்ச்சி அடைகிறேன். மற்ற வீரர்கள் குறித்தும் எனக்குத் திருப்தியே என்றார்.


Click it and Unblock the Notifications