
மழை பாதிப்பு
இந்நிலையில் தான் போட்டி நடைபெறுமா என்பதிலேயே சந்தேகம் உருவாகியுள்ளது. ஏனென்றால் இரு அணி கேப்டன்களும் டாஸ் போடுவதற்கு புறப்படும் நேரத்தில் மழைக் குறுக்கிட்டுவிட்டது. இதனால் டாஸ் போடுவதே தள்ளிப்போனது. முதலில் தூறல் மழை பெய்த சூழலில் சிறிது நேரத்திலேயே கன மழை பெய்ய தொடங்கிவிட்டது.

மூடப்பட்ட பிட்ச்
இதனையடுத்து மைதானம் முழுவதும் கவர் செய்யப்பட்டுவிட்டது. போட்டியில் மழையின் குறுக்கீடு பெரிதாக இருக்காது என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறிய சூழலில், மழையின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் விராட் கோலியின் அதிரடி ஆட்டத்தை பார்க்க முடியாதா என ரசிகர்கள் ஏக்கத்துடன் உள்ளனர்.

போட்டி நடைபெறுமா?
ஆனால் நிச்சயம் கோலியின் ஆட்டம் இன்று இருக்கும் எனத் தெரிகிறது. ஏனென்றால் மைதானத்தில் மழைக்கு நிகராக அதிகப்படியாக காற்று வீசி வருகிறது. தொடக்கத்தில் சற்று குறைவாக இருந்த காற்றின் வேகமும் அதிகரித்துள்ளதால், மழை நீண்ட நேரம் நீடிக்காது என வல்லுநர்கள் கூறியுள்ளனர். 20 ஓவர்களும் முழுவதுமாக வீசப்படும் என்றும் தெரிகிறது.
Recommended Video

அதிர்ச்சி தகவல்
இது ஒருபுறம் இருக்க, கொல்கத்தா நகரத்தில் இன்று காலை முதலே அவ்வப்போது மழைப்பொழிவு இருந்துள்ளது. லக்னோ மற்றும் ஆர்சிபி என இரண்டு அணிகளுமே தங்களது பயிற்சி முகாம்களை ரத்து செய்துள்ளனர். லீக் சுற்றுக்கு எடுத்த பயிற்சியுடன் தான் தற்போது களமிறங்குகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications