
முதலில் பேட்டிங்
இந்த போட்டியில் இந்தியா டாஸ் வென்றும் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. ஆனால் மழை பெய்த காரணத்தால் களம் இரண்டாவது பேட்டிங் செய்பவர்களுக்கு சாதகமாக மாறியது. இந்திய வீரர்களே இப்படி நடக்கும் என்று நினைக்கவில்லை.

மிடில்
இந்திய அணியில் ஓப்பனிங் இறங்க நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். கடைசியில் கூட சமயங்களில் பவுலுர்கள் எதாவது செய்து அடித்து விடுகிறார்கள். ஆனால் மிடில் ஆர்டரில் இன்னும் இந்திய அணி சாம்பார் சாதம் சாப்பிட்டது போல மெதுவாக ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். இல்லையென்றால் நேற்று 300 ரன் தாண்டவேண்டிய வீரர்கள் 289ல் அவுட் ஆகி இருக்க மாட்டார்கள்.

முக்கியமானது
இந்த போட்டியில் மில்லர் 6 ரன்கள் இருக்கும் போது சாஹல் ஓவரில் ஷ்ரேயஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அவர் கேட்சை தவறவிட்டார். தோல்விக்கு முக்கிய காரணம் இதுதான் என்று கூறப்படுகிறது.

அடுத்த வாய்ப்பு
அதே ஓவரில் சாஹல் பந்தில் மில்லர் மீண்டும் அவுட் ஆனார். ஆனால் அது நோ பால் என்பதால் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இதனால் அவர் பின் அதிரடி பாதைக்கு மாறி 39 ரன்களை 28 பந்தில் எடுத்தார். இதில் 4 பவுண்டரி 2 சிக்ஸர்கள் அடக்கம். தோல்விக்கு இதுதான் காரணம் என்று தவான் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications