
டெல்லி : இங்கிலாந்துக்கு எதிரான 2002 நாட்வெஸ்ட் தொடரை இந்திய அணி வென்ற போது, அப்போதைய கேப்டன் கங்குலி தன் சட்டையை கழற்றி, சுழற்றிய சம்பவம் மிகவும் பிரபலமான ஒன்று. இன்று வரை கங்குலி பற்றி பேசினால், இந்த சம்பவத்தை நினைவு கூறாமல் இருக்க முடியாது. அதிக செய்தி ஊடகங்கள், சமூக வலைதளங்கள் இல்லாத காலத்திலேயே வைரலான சம்பவம் இது.
ஆன்ட்ரூ பிளின்டாப் இந்தியாவில் நடந்த ஒரு நாள் தொடரின் போது, தன் சட்டையை கழற்றி, வெற்றியை கொண்டாடினார். அதற்கு பழி தீர்க்கும் வகையில் தான் கங்குலி இதை செய்தார் என பரவலாக பேசப்பட்டது. இதை பற்றி அதிகம் வெளியில் பேசாத கங்குலி, தற்போது “ப்ரேக்பாஸ்ட் வித் சாம்பியன்ஸ்” என்ற இணைய நிகழ்ச்சியில் இது பற்றி பேசி இருக்கிறார்.
