
தேஸ்மாண்ட் டூடு
தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய தேஸ்மாண்ட் டூடு, இன்று கேப் டவுனில் காலமானார். அவருக்கு வயது 90, இவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவே தென்னாப்பிரிக்க வீரர்கள் கையில் கருப்பு பேட்ஜ் அணிந்து விளையாடினர். டூடு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வென்றவர் .

நிறவெறி எதிர்ப்பு
லண்டனில் எம்.ஏ. படித்த தேஸ்மாண்ட் டூடு, தென்னாப்பிரிக்காவுக்கு திரும்பிய போது, அங்கு கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெற்ற கொடுமைகளை கண்டித்து போராடினார். 1986ஆம் ஆண்டு கேப்டவுனின் ஆர்ச்பிஷப்பாக நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்காவை ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரசின் ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும் டூடு எடுத்தார்.

அநீதிக்கு எதிரான குரல்
1995ஆம் ஆண்டு நிறவெறி காலத்தில் நடைபெற்ற குற்றங்களை விசாரிக்கும் குழுவில் தலைவராக செயல்பட்ட டூடு, கருப்பின மக்களுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களை விசாரித்து தமக்கு மன அழுத்தம் ஏற்பட்டுவிட்டதாக கூறினார். தென்னாப்பிரிக்காவில் அனைத்து மக்களும் அமைதியாக சமமாக வாழ வேண்டும் என்று குரல் கொடுத்த டூடு, பாலஸ்தீன பிரச்சினையிலும் , இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுத்தார்.

மக்கள் அஞ்சலி
டூடுவும், மறைந்த தென்னாப்பிரிக்க அதிபர் நெல்சன் மண்டேலாவும் நெருங்கிய நண்பர்கள். மண்டேலாவின் கொள்கைகளுக்கு ஆதரவாக டூடு செயல்பட்டார். இருப்பினும் மண்டேலாவின் இறுதி சடங்கில் பங்கேற்க டூடுக்கு ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் அனுமதி அளிக்கவில்லை. கடந்த 20 வருடங்களுக்கு முன் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டூடு, தனது 90வது வயதில் காலமானார். டூடுவின் மறைவுக்கு தென்னாப்பிரிக்க மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications