கோல்கத்தா: இந்திய அணியின் இளம் புயல் ஹார்திக் பாண்ட்யா போன்ற ஹேர்ஸ்டைலில் உள்ள இலங்கையின் மிகவேகப் பந்து வீச்சாளர் சுரங்கா லக்மால், புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான 3 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டி, கோல்கத்தாவில் நடக்கிறது. முதலில் விளையாடியத் துவங்கிய இந்திய அணி, இரண்டாவது நாளான இன்று ஆட்ட நேர இறுதியி்ல், 5 விக்கெட் இழப்புக்கு, 74 ரன்கள் என்ற நிலையில் ஆட்டங்கண்டுள்ளது.
