சென்னை: கிரிக்கெட் வீரர் டோணியுடனான காதல் உறவு கறை அல்லது வடுவை போன்றது என நடிகை ராய் லக்ஷ்மி தெரிவித்துள்ளார்.
நடிகை ராய் லக்ஷ்மி ஒரு காலத்தில் கிரிக்கெட் வீரர் டோணியை காதலித்தார். அதன் பிறகு அவரவர் பாதையை பார்த்து சென்றுவிட்டனர். மக்களும் அதை பற்றி மறந்தே போய்விட்டனர்.
இந்நிலையில் இது குறித்து ராய் லக்ஷ்மி தற்போது பேசியுள்ளார். அவர் கூறுகையில்,

டோணியுடனான என் உறவு கறை மற்றும் வடுவை போன்று மறைய பல காலம் ஆகும் போன்று. அது பற்றி தற்போது பேசும் அளவுக்கு மக்களுக்கு தெம்பும், பொறுமையும் உள்ளது ஆச்சரியமாக உள்ளது. ஒவ்வொரு முறையும் டிவி சேனல்கள் டோணியின் காதலிகள் பற்றி பேசுகையில் எங்கள் உறவை பற்றி பேசுகிறார்கள். ஒரு நாள் என் குழந்தைகள் இதை டிவியில் பார்த்துவிட்டு என்னை கேள்வி கேட்குமோ என்று அஞ்சுகிறேன்.
டோணியை அடுத்து நான் 3 முதல் 4 பேரை காதலித்தேன். ஆனால் அதை எல்லாம் யாரும் கண்டுகொள்ளவில்லை. எனக்கும், டோணிக்கும் இடையே ஒர்க்அவுட் ஆகவில்லை. நாங்கள் ஒருவர் மீது ஒருவர் மதிப்பு வைத்துள்ளோம். அவருக்கு திருமணமும் ஆகிவிட்டது.
எனக்கு என் படங்கள் தான் முக்கியம். நான் 3 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு தொழில் அதிபரை காதலித்தேன். தற்போது வேலையை மட்டுமே காதலிக்கிறேன் என்றார்.
ஏம்ப்பா நீங்க யாராவது லக்ஷ்மி, டோணி காதல் பற்றி பேசினீங்க?