
ஐபிஎல் தொடர்
இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் சமீபத்தில் ரஞ்சிக்கோப்பை உள்ளிட்ட பல உள்நாட்டு தொடர்கள் ஒத்திவைக்கப்பட்டன. இதே போல பிப்ரவரி 12 - 13ம் தேதிகளில் பெங்களூருவில் நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் மெகா ஏலமும் ஒத்திவைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடர் நடைபெறுமா என்பதிலேயே தற்போது குழப்பம் ஏற்பட்டுள்ளது.

அவசரக்கூட்டங்கள்
இந்தாண்டு 10 அணிகளுக்காகவும் இந்தியாவில் 10 இடங்களை பிசிசிஐ தேர்வு செய்து வைத்திருந்தது. அதன்படி ஏப்ரல் 2ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை என ஒன்றரை மாத காலம் போட்டிகளை நடந்த திட்டமிடப்பட்டிருந்தன. ஆனால் கொரோனா பாதிப்பால் திட்டங்களை மாற்ற பிசிசிஐ-ல் அவசர கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

ப்ளான் பி என்ன
இந்த கூட்டத்தில் "ப்ளான் பி" குறித்து முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. ஒருவேளை இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் அதிகமடைந்தால், மும்பையில் மட்டுமே ஐபிஎல் தொடரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. மும்பை நகரத்தில் வான்கடே, சிசிஐ, பாட்டில் ஸ்டேடியம் என 3 மைதானங்கள் ஐபிஎல் போட்டிகளை நடந்த உகந்ததாக உள்ளது. இதனை புக் செய்ய தான் ஏற்பாடுகள் நடத்தப்படுகின்றன.

மும்பையில் அமீரக திட்டம்
அமீரகத்திலும் 3 மைதானங்களில் மட்டுமே ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரும் நடத்தி முடிக்கப்பட்டன. எனவே மும்பையில் அதே போன்று 3 மைதானங்களுக்கும் பேருந்து வழி பயணத்தை ஏற்படுத்தி வீரர்களை பாதுகாக்க முடியும். இதே போல வீரர்களின் சிரமங்களை குறைக்க டபுள் எட்டர்ஸும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Recommended Video

எதிர்பார்ப்பு
ஐபிஎல் 2022ம் ஆண்டு தொடருக்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டுவிட்டன. அடுத்ததாக எந்த வீரர்களை ஏலம் எடுக்க போகின்றன என்பது குறித்து தான் எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக சுரேஷ் ரெய்னா, கே.எல்.ராகுல், டேவிட் வார்னர், ஹர்திக் பாண்ட்யா என பல முக்கிய வீரர்கள் ஏலத்திற்கு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











