
கண்டுகொள்ள மாட்டேன்
நடப்பு பார்டர் கவாஸ்கர் தொடரில் 5 இன்னிங்ஸ் விளையாடிய விராட் கோலி மொத்தமே 111 ரன்கள் தான் அடித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், இந்தத் தொடரில் நான் எந்த பேட்ஸ்மேன்களின் பார்மை பற்றியும் கண்டுகொள்ள போவதில்லை. காரணம் பேட்ஸ்மேன்களுக்கு இந்த தொடர் கெட்ட கனவாக இருக்கிறது.

கணிக்க முடியாது
ஆடுகளம் பேட்ஸ்மேன்களை மிகவும் சோதிக்கிறது. எனினும் முதல் இரண்டு டெஸ்ட் போட்டியில் தோற்று விட்டு மூன்றாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா வென்ற விதம் பாராட்டத்தக்கது. பந்து நன்றாக திரும்புகிறது. பந்தின் பவுன்சும் கணிக்க முடியாத அளவுக்கு மாறுபட்டுக் கொண்டே இருக்கிறது. இதன் மூலம் நீங்கள் ஆடுகளத்தில் நம்பிக்கையை இழந்து விடுவீர்கள்.
இப்படிப்பட்ட தருணத்தில் உங்களால் பேட்டிங் செய்வது மிகவும் கடினமாகும்.

திரும்ப வருவார்
இப்படிப்பட்ட சூழல் தொடர்ந்து உங்களுக்கு நடந்து கொண்டே இருந்தால் உங்களால் பேட்டிங்கை விளையாடுவது முடியாது. நான் கோலி குறித்து பலமுறை திரும்பத் திரும்ப ஒரே கருத்தைதான் சொல்லிக் கொண்டு வருகிறேன். சாம்பியன் வீரர்கள் எப்படியும் தங்களுக்கான பாதையை கண்டுபிடித்து விடுவார்கள். தற்போது விராட் கோலிக்கு ரன் வறட்சி ஏற்பட்டு இருக்கலாம்.

கவலைப்படவில்லை
ஆனால் பேட்ஸ்மேன் ஆக நீங்கள் தடுமாறும் போது உங்களைப் பற்றி உங்களுக்கே தெரிய வரும். அதனால் நான் விராட் கோலி ஃபார்ம் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர் மீண்டும் ரன் குவிப்பார் என முழு நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். நான்காவது டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் விராட் கோலி தனது மனைவியுடன் கோயிலில் வழிபாடு நடத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











