
கூடுதல் பொறுப்பு
இந்த நிலையில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ப்ரித்வி ஷா சிறப்பான பேட்டிங் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் ரிஷப் பண்ட் ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ள நிலையில், தொடக்க வீரரான ப்ரித்வி ஷாவிற்கு கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது.

மாறுபட்ட ப்ரித்வி ஷா
டெல்லி அணியின் முக்கிய வீரரான ப்ரித்வி ஷா குறித்து அந்த அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் கூறுகையில், என்சிஏ அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வந்த ப்ரித்வி ஷா, டெல்லி அணியுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை நான் பார்த்த ப்ரித்வி ஷாவில் இருந்து முற்றிலும் மாறுபட்ட ப்ரித்வி ஷாவை பார்க்கிறேன். அவரது உடல்தகுதியில் அதிக கவனம் கொண்டுள்ளார். சில நாட்களுக்கு முன் அவரிடம் பேசும் போது, எந்த அடிப்படையில் பயிற்சியில் ஈடுபடுகிறார் என்பது ஆச்சரியத்தை கொடுத்தது.

பாண்டிங் கணிப்பு
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ப்ரித்வி ஷாவிற்கு மிகப்பெரிய ஒன்றாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன். ப்ரித்வி ஷாவின் கண்களில் ஒரு காட்டுப்பசி தெரிகிறது. அதனால் நடப்பாண்டில் அவரது பேட்டிங் வேறு மாதிரி இருக்கும் என்று நினைக்கிறேன். அனைவருக்கும் ப்ரித்வி ஷாவின் திறமை மற்றும் ஆட்டத்தில் எந்த சந்தேகமும் இல்லை.

உண்மையான முகம்
அதனால் ப்ரித்வி ஷாவின் உண்மையான முகம் இந்த ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெளியில் வரும் என்று தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி தொடரில் 6 போட்டிகளில் மட்டுமே விளையாடி 595 ரன்களை ப்ரித்வி ஷா விளாசியுள்ளார். இதனால் ஐபிஎல் தொடரிலும் அந்த ஃபார்மை தொடருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











