தோனியை முந்தினார்
தோனி தன் முதல் ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 297 ரன்கள் எடுத்திருந்தார். ரிஷப் பண்ட் தற்போது ஐந்து டெஸ்ட் போட்டிகளில் 346 ரன்கள் எடுத்துள்ளார். தோனிக்கு அடுத்து அனைத்து வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக ரிஷப் பண்ட் தான் இருப்பார் என கூறப்பட்டு வரும் நிலையில், ஐந்து டெஸ்ட் போட்டிகளில் தோனியை முந்தி தன் வாய்ப்பை நியாயப்படுத்தி உள்ளார் ரிஷப் பண்ட்.
92இல் ஒற்றுமை
மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால் தோனியும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு முறை 92 ரன்களில் ஆட்டமிழந்துள்ளார். ரிஷப் பண்ட்டும் தோனி போன்றே அதிரடி ஆட்டம் ஆடுகிறார். அதுவும் கூட ரிஷப் 90 ரன்கள் அடித்த பின் ஆட்டமிழக்க ஒரு காரணமாக இருக்கிறது.
டிராவிட் - ரிஷப் பண்ட்
தோனி மட்டுமில்லாமல், இந்தியாவின் மற்றொரு தற்காலிக விக்கெட் கீப்பராக இருந்த ராகுல் டிராவிட் போன்றே ரிஷப் பண்ட்டும் அடுத்தடுத்த இன்னிங்க்ஸ்களில் 90 ரன்களுக்கு மேல் எடுத்து ஆட்டமிழந்து உள்ளார். டிராவிட் 1997இல் இலங்கை அணிக்கு எதிரான டெஸ்டில் இரண்டு இன்னிங்க்ஸ்களில் 92 மற்றும் 93 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். ரிஷப் பண்ட் ராஜ்கோட் டெஸ்டில் முதல் இன்னிங்க்ஸிலும், அடுத்து ஆடிய ஹைதராபாத் போட்டியின் முதல் இன்னிங்க்ஸிலும் 92 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அணியில் இடம் உறுதி
ஆக மொத்தத்தில் இந்திய அணியில் தன் இடத்தை பசை போட்டு ஒட்டிக் கொண்டுள்ளார் ரிஷப் பண்ட். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இடம் பெற்றுள்ளார் ரிஷப் பண்ட். விக்கெட் கீப்பிங்கில் சற்று அனுபவம் பெற்று விட்டால் தோனியின் இடத்திற்கு சரியான நபராக இருப்பார் ரிஷப் பண்ட்.