
மருத்துவ ஹெலிகாப்டர்
இதில் ரிஷப் பண்டின் மூளையில் ஏதேனும் ரத்தக்கசிவு ஏற்பட்டிருக்கிறதா என்பது குறித்து எம்ஆர்ஐ ஸ்கேன் செய்யப்பட்டது. இதில் அவருக்கு எந்த உள் காயமும் இல்லை என முதலில் கூறப்பட்டது. இந்த நிலையில் ரிஷப் பண்டிற்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் அவசரமாக மும்பை அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவ ஹெலிகாப்டர் மூலம் அவர் டெல்லியில் இருந்து மும்பைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ரசிகர்கள் அதிர்ச்சி
அப்போது ரிஷப் பண்டின் உடலை மருத்துவ குழு எடுத்து சென்றனர். அப்போது பண்டின் உடலில் எவ்வித அசைவும் இல்லாததால் இதனை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்த ரசிகர்கள் ரிஷப் பண்டிற்கு உண்மையில் என்னதான் நடந்தது? ஏன் அவர் அவசரமாக மும்பை அழைத்துச் செல்லப்படுகிறார் என்பது குறித்து கேட்டு வருகின்றனர் .
மேல் சிகிச்சை
இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ரிஷப் பண்டின் முழு மருத்துவ செலவையும் பி சி சி ஐ ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளது. ரிஷப் பண்டிற்கு மேல் சிகிச்சை தேவைப்படுவதால் மும்பையில் உள்ள பிரபல கோகிலாபேன் திருபாய் அம்பானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் அங்கு விளையாட்டு தொடர்பான மருத்துவம் மற்றும் ஆர்தோஸ்கோப்பி நிபுணர் டாக்டர் தின்ஷா படிவாலா தலைமையிலான மருத்துவ குழு ரிஷப் பண்ட்க்கு சிகிச்சை அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிசிசிஐ விளக்கம்
இதில் ரிஷப் பண்டிற்கு முதலில் காலில் ஏற்பட்டுள்ள தசை சிதைவுக்கு அறுவை சிகிச்சை செய்ய உள்ளது. இதன் பிறகு பி சி சி ஐ யின் மருத்துவ குழு ரிஷப் பந்தின் உடல்நிலை கண்காணித்து அவரை பழைய நிலைக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட உள்ளதாக அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .இந்த காலகட்டத்தில் ரிஷப் பண்டின் தேவையான அனைத்து செலவையும் பிசிசிஐயே மேற்கொள்ளும் என ஜெயிஷா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











