பேட்டிங்கில் பண்ட்
இது முதல் போட்டி என்பதால் ரிஷப் பண்ட் கேப்டன்ஷியில் பெரிய குறைகளை சொல்ல முடியவில்லை. அதே சமயம், பேட்டிங்கிலும் நேற்று 16 பந்துகளை எதிர்கொண்ட ரிஷப் பண்ட் 29 ரன்களை விளாசினார். இதில் 2 பவுண்டரிகளும், 2 சிக்சர்களும் அடங்கும். கேப்டனாக பேட்டிங்கிலும் ரிஷப் பண்ட் பாஸ் மார்க் வாங்கினார்.
Recommended Video
தோனி சாதனை முறியடிப்பு
ஆனால், தென்னாப்பிரிக்க வீரர்கள் ரன்களை குவிக்க தொடங்கியதும் ரிஷப் பண்ட் கொஞ்சம் பதற தொடங்கிவிட்டார். இந்த நிலையில், இளம் வயதில் இந்திய டி20 அணியின் கேப்டனாக பொறுப்பு ஏற்று ரிஷப் பண்ட் , தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். தோனி 26 வருடம் 68 நாட்களில் கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
4வது வீரர் என்ற பெருமை
தற்போது ரிஷப் பண்ட் 24 வருடம் 248 நாட்களில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ளார். டி20 அணிக்கு கேப்டனாக மாறிய இளம் வீரர் பட்டியலில் சுரேஷ் ரெய்னா முதலிடத்தில் உள்ளார். ரெய்னா 23 வருடம் 197 நாட்களில் ரெய்னா கேப்டன் பொறுப்பை ஏற்றார். இதே போன்று விக்கெட் கீப்பராக இருந்து இந்திய அணிக்கு கேப்டனாக மாறிய 4வது வீரர் என்ற பெருமையை ரிஷப் பண்ட் பெற்றார்.
எதிர்கால கேப்டன்
இதற்கு முன்பு சையது கிர்மானி, ராகுல் டிராவிட் மற்றும் தோனி ஆகியோர் இந்த பெருமையை பெற்றனர். தென்னாப்பிரிக்க தொடரில் ரிஷப் பண்ட் சிறப்பாக செயல்பட்டால், அடுத்த முழு நேர கேப்டனாக செயல்படும் நபர்கும் வாய்ப்பு ரிஷப் பண்ட்க்கு கிடைத்துவிடும். எஞ்சிய 4 போட்டியில் அவர் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்தே அது முடிவாகும்.