
ஜெய்ஷா உறுதி
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் பண்டின் குடும்பத்தினருடன் பேசினேன். அவருக்கு எந்த மாதிரி சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது என்பது குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தேன். ரிஷப் பண்டிற்கு என்ன சிகிச்சை வேண்டுமோ அதனை உயர்தர வசதியில் அளிக்க பிசிசிஐ முழு உதவியும் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் .

என்ன காயங்கள்
ரிஷப் பண்டிற்கு நெற்றியில் இரண்டு இடங்களில் வெட்டு ஏற்பட்டு இருக்கிறது. வலது கால் முட்டியில் தசை நார் கிழிந்து இருக்கிறது. வலது கை மணிக்கட்டு , கணுங்கால் பாதம் மற்றும் முதுகில் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருக்கிறது. முதல் கட்ட மருத்துவ பரிசோதனையில் ரிஷப் பண்டிற்கு உள் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிய வந்துள்ளது.

ஸ்கேன் சோதனை
மேலும் பண்டின் உடல் உறுப்புகளில் எந்த பாதிப்பும் இல்லை என தெரிகிறது. எனினும் காயங்களின் ஆழத்தை அறிவதற்காக மேலும் பல கட்ட ஸ்கேன்கள் ரிஷப் பண்டிற்கு எடுக்கப்பட உள்ளது. வலி தெரியாமல் இருக்க பண்டிற்கு வலி நிவாரண மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. ரிஷப் பண்ட் சுமார் 45 நாட்கள் வரை மருத்துவமனையில் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்.

6 மாதம் ஆகலாம்
இதனை அடுத்து அவர் பழைய மாதிரி திரும்ப ஆறு மாதங்கள் ஆகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஆஸ்திரேலியாக்கு எதிரான டெஸ்ட் தொடர், ஐபிஎல், ஆசிய கோப்பை உள்ளிட்ட தொடர்களில் பண்ட் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது. ரிஷப் பண்ட் விளையாடாமல் இருந்தாலும் அவர் உயிருடன் இருப்பதே எங்களுக்கு போதும் என ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications