
ராகுலுக்கு இடமில்லை
மேலும், இது குறித்து நான் வீரர்களிடம் பேசி விட்டேன். அணியில் வீரர்கள் இடம்பெறாமல் போனதற்கு திறமை காரணம் அல்ல என்பதை புரியவைத்துவிட்டேன் என்று கூறினார். டிராவிட்டின் இந்த பேச்சுக்கு, இந்திய அணியில் இனி கேஎல் ராகுலுக்கு இடமில்லை என்பதையே குறிக்கும் வகையில் அமைந்திருப்பதாக தெரியவந்துள்ளது.

தன்னலமான ஆட்டம்
கேஎல் ராகுல் திறமையான வீரராக அறியப்பட்டாலும், டி20 போட்டியில் அவர் அணிக்கு கூடுதல் சுமையாக தான் விளங்குகிறார். குறைந்த பந்தில் அதிக ரன் எடுக்கும் அம்சம் உடைய வீரர் தான் டி20 போட்டிகளுக்கு தேவை. ஆனால் ராகுல் ஆட்டம் அதற்கு ஏற்றார் போல் இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. லக்னோ அணி ஐபிஎல் போட்டியில் தோற்றதுக்கு ராகுலின் தன்னலமான ஆட்டமே காரணம் என்றும் கூறப்பட்டது.

கிரின் சிக்னல்
தற்போது ராகுல் காயத்திலிருந்து திரும்பிய பிறகும், அவருடைய ஆட்டம் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. கத்துக்குட்டி அணியான ஹாங்காங்க்கு எதிராக 36 பந்துகளில் 39 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் ராகுலை அணியிலிருந்து நீக்கி, அந்த இடத்தில் ரிஷப் பண்டை களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இதற்கு பிசிசிஐயும் கிரின் சிக்னல் கொடுத்துள்ளது.

அதிரடி மாற்றம்
மேலும், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் ஆவேஷ் கான் அதிரடியாக நீக்கப்பட்டு, அஸ்வின் அல்லது ரவி பிஸ்னாய் ஆகியோருக்கு வாய்ப்பு கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று விராட் கோலிக்கு தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்துவிட்டு தீபக் சாஹரை பிளேயிங் லெவனில் சேக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











