Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இத்தனை கோடியா? உத்தரகாண்ட் மாநிலத்திலே அதிக வரி செலுத்திய ரிஷப் பண்ட்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி விக்கெட் கீப்பரும், அதிரடி பேட்டருமான ரிஷப் பண்ட், மைதானத்தில் மட்டுமின்றி வரி செலுத்துவதிலும் புதிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். கடந்த 2025-26 நிதியாண்டில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அதிக வரி செலுத்திய தனிநபராக ரிஷப் பண்ட் உருவெடுத்துள்ளார். இந்த நிதியாண்டில் அவர் செலுத்தியுள்ள மொத்த வரித் தொகை ரூ. 23.84 கோடியாகும்.

28 வயதான ரிஷப் பண்ட், உள்நாட்டு கிரிக்கெட்டில் டெல்லி அணிக்காக விளையாடினாலும், அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில்தான் வசித்து வருகிறார். கடந்த ஆண்டும் அவர்தான் அந்த மாநிலத்தின் அதிக வரி செலுத்திய நபராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த நிதியாண்டில் அவர் ரூ. 10.5 கோடியை வரியாகச் செலுத்தியிருந்தார்.

Rishabh Pant

ரிஷப் பண்ட் இவ்வளவு பெரிய தொகையை வரியாகச் செலுத்த அவரது ஐபிஎல் வருமானமும் ஒரு முக்கியக் காரணமாகும். ஐபிஎல் 2026 சீசனுக்காக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் அவர் ஒப்பந்தம் செய்துகொண்ட ரூ. 27 கோடி ஒப்பந்தமே இதற்கு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது.

விராட் கோலி ஏன் தாடியை எடுப்பதே இல்லை? தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

விராட் கோலி ஏன் தாடியை எடுப்பதே இல்லை? தாடிக்கு பின்னால் இருக்கும் ரகசியம் என்ன?

ஐபிஎல் வருமானம் தவிர, பிசிசிஐ ஒப்பந்தத்தின் மூலமும் அவருக்கு கணிசமான வருமானம் கிடைத்துள்ளது. வரி மதிப்பீட்டு காலத்தில் பிசிசிஐ-யின் 'கிரேடு ஏ' ஒப்பந்தத்தில் இருந்த பண்ட், ஆண்டுக்கு ரூ. 5 கோடி பெற்று வந்தார். எனினும், அதற்குப் பிறகு அவர் 'கிரேடு பி' ஒப்பந்தத்திற்கு மாற்றப்பட்டதால், அவரது ஆண்டு ஒப்பந்த மதிப்பு ரூ. 3 கோடியாகக் குறைந்துள்ளது.

ஐபிஎல் 2025 சீசனின் போது, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து போட்டி ஊதியமாக ரூ. 1.1 கோடியை பண்ட் பெற்றார். இதில் அவர் விளையாடிய ஒவ்வொரு போட்டிக்கும் தலா ரூ. 8 லட்சம் வீதம் வழங்கப்பட்டது. மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு டெஸ்ட் போட்டிக்கும் ரூ. 15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு தலா ரூ. 8 லட்சமும் அவருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது.

விளம்பரங்கள் மூலமும் பண்ட் பெருமளவில் சம்பாதித்து வருகிறார். ஒரு நாள் விளம்பரப் படப்பிடிப்பில் பங்கேற்க ரூ. 2.5 கோடி வசூலிக்கும் அவர், இரண்டு நாட்கள் படப்பிடிப்புக்கு ரூ. 4.5 கோடி முதல் ரூ. 4.75 கோடி வரை கட்டணமாகப் பெறுகிறார். இதன் மூலம் விளம்பர ஒப்பந்தங்கள் வாயிலாக மட்டுமே அவருக்கு ஆண்டுக்கு ரூ. 28 முதல் ரூ. 35 கோடி வரை வருவாய் கிடைப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாருக்கிட்ட? இலங்கை வீரர் வாலை ஒட்ட நறுக்கிய ஜடேஜா.. இந்தியா பதிலடி

Also Read

யாருக்கிட்ட? இலங்கை வீரர் வாலை ஒட்ட நறுக்கிய ஜடேஜா.. இந்தியா பதிலடி

தற்போது அடிடாஸ் , எஸ்ஜி , தம்ஸ் அப் , கேட்பரி , போட் , நாய்ஸ் , சொமாட்டோ , ஜேஎஸ்டபிள்யூ சிமெண்ட் மற்றும் மேக்மைடிரிப் போன்ற முன்னணி பிராண்டுகளின் விளம்பரத் தூதராக ரிஷப் பண்ட் செயல்பட்டு வருகிறார்.

Story first published: Friday, August 7, 2026, 19:17 [IST]
Other articles published on Aug 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+