
சிசிடிவி பதிவுகள்
இந்நிலையில் ரிஷப் பண்ட்-ன் கார் விபத்திற்கு உள்ளான காட்சிகள் சாலையின் அருகே இருந்த கடையின் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. அதில் அதிகாலை 5.30 மணியளவில் வேகமாக வந்த கார் சாலையின் தடுப்பின் மீது மோதி சுழன்றுக்கொண்டே சென்றுள்ளது. மோதி வேகத்தில் கார் தீப்பிடித்த காட்சிகளும் அதில் பதிவாகியுள்ளது. இதனை வைத்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

தீ பற்றிய காட்சிகள்
இதே போல விபத்து நடந்த இடத்தில் இருந்து ஒருவர் செல்போனில் எடுத்த வீடியோவும் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கார் ஒருபுறம் தீப்பற்றி எறிய, மறுபுறம் ரிஷப் பண்ட் தலை முதல் கால் வரை ரத்தம் சொட்ட சொட்ட விழுந்துக்கிடக்கிறார். அவரை அருகில் இருந்தவர்கள் உதவி செய்து தூக்கி நிறுத்திய காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது காண்போரை பதறவைக்கிறது.

முதற்கட்ட தகவல்
இதுகுறித்து முதற்கட்ட தகவலை கொடுத்த போலீசார், ரிஷப் பண்ட் இரவு முழுவதும் உறக்கமின்றி தனியாளாக காரை ஓட்டி வந்துள்ளார். சாலையில் பணி மூட்டம் எதுவும் இல்லாததால், அவர் தூக்க கலக்கத்தில் வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார் எனக்கூறியுள்ளனர். மேலும் கார் தீப்பிடித்ததை அடுத்து அவர், கண்ணாடிகளை உடைத்துக்கொண்டு வெளியேறியுள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மருத்துவர்களின் ரிப்போர்ட்
பண்ட்-ன் உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகமும் தகவல் வெளியிட்டுள்ளது. அதில், ரிஷப் பண்ட்-க்கு உயிருக்கு ஆபத்தாகும் வகையில் ஒன்றும் ஆகவில்லை எனக்கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு தலையிலும், கால் பகுதியிலும் பெரும் காயங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் முதுகுபகுதியிலும் காயத்தின் தன்மை தீவிரமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதனால் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.
எப்போது குணமடைவார்
ரிஷப் பண்ட் சமீபத்தில் நடந்த வங்கதேச தொடரில் விளையாடிவிட்டு தற்போது தான் இந்தியாவுக்கு வந்தார். இலங்கை தொடரில் வாய்ப்பு பெறாத அவர் பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் இணையவிருந்தார். ஆனால் அதற்குள் தான் விபத்து நடந்துள்ளது. பண்ட் முழுமையாக குணமடைய 6 மாதங்களுக்கும் மேல் ஆகும் எனக்கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











