
சென்னை
இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணியின் இளம் வீரர் பண்ட் அவுட்டாகாமல் இருந்தார். இன்று தொடக்கத்திலேயே அக்சர் பட்டேல், இஷாந்த் ஆகியோர் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இதனால் குல்தீப் மற்றும் பண்ட் மட்டும் போராடி வந்தனர். முடிந்த அளவு பண்ட் பேட்டிங் செய்தார்.

யாதவ்
யாதவிற்கு ஸ்டிரைக் கொடுக்காமல் முடிந்த அளவு பண்ட் ஸ்டிரைக் எடுத்தார். ஒவ்வொரு ஓவரிலும் கடைசி பந்தில் சிங்கிள் எடுத்து பண்ட் ஸ்டிரைக் எடுத்தார். இந்த நிலையில் ஸ்டோன் பவுலிங்கில் பண்ட் இரண்டு ரன் எடுக்கலாம் என்று ஓடினார்.

இங்கிலாந்து
ஆனால் அந்த பந்தில் இரண்டு ரன் எடுக்க முடியவில்லை. இதனால் ஸ்டோன் ஓவரில் ஸ்டிரைக் எண்டில் குல்தீப் சிக்கினார். இதனால்தான் இந்திய அணி விக்கெட்டுகளை இழந்தது. ஸ்டோன் போட்ட ஷார்ட் பந்தை எதிர்கொள்ள முடியாமல் குல்தீப் அவுட் ஆனார்.

அவுட்
இவர் அவுட் ஆனதை தொடர்ந்து அடுத்தடுத்து சிராஜும் ஒரு பவுண்டரி அடித்துவிட்டு அவுட் ஆனார். ஒரே ஒரு சிங்கிளுக்கு பண்ட் ஆசைப்படாமல் இருந்திருந்தால் இன்று இந்திய அணி கூடுதலாக ரன் எடுத்து இருக்கும். இந்த தவறை பண்டும் உணர்ந்து கொண்டார்.

தவறு
பெவிலியன் திரும்பும் போது பண்ட் மிகவும் கோபமாக காணப்பட்டார். என்ன செய்வது என்று தெரியாமல் மிகவும் கோபமாக பேட்டை தரையில் தட்டியபடி கிளம்பி சென்றார். பண்ட் இப்படி கோபமாக சென்றது ரசிகர்களை வருத்தப்பட செய்தது.


Click it and Unblock the Notifications