Rishabh Pant கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார்.. ஐபிஎல் 2026 லக்னோ அணி கடைசி இடம் பிடித்ததால் முடிவு
லக்னோ: ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் பதவியிலிருந்து இந்திய விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் விலகியுள்ளார். ஐபிஎல் 2026 சீசனில் அணி பத்தாவது இடத்தைப் பெற்றதால், கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விடுவிக்கக் கோரி பன்ட் விடுத்த கோரிக்கையை LSG உரிமையாளர் உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
லக்னோ உரிமையாளர் மே 29 அன்று தனது அதிகாரப்பூர்வ 'X' சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட அறிக்கையில் இதனை உறுதிப்படுத்தியது. ₹27 கோடிக்கு IPL 2025 மெகா ஏலத்தில் LSG அணியில் இணைந்த 28 வயதான ரிஷப் பன்ட், அணியின் மோசமான செயல்பாடு காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.

கேப்டனாக, ரிஷப் பன்ட் மொத்தம் 28 ஐபிஎல் போட்டிகளில் LSG அணியை வழிநடத்தியுள்ளார். இதில் அவரால் வெறும் 10 வெற்றிகளை மட்டுமே அணிக்கு பெற்றுத்தர முடிந்தது. இது அவரது கேப்டன்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நடப்பு சீசனில் 13 இன்னிங்சில் விளையாடியுள்ள ரிஷப் பண்ட் 312 ரன்கள் அடித்துள்ளார். இதில் அவருடைய சராசரி 28ஆகும்.இதில் ஒரு அரைசதம் மட்டுமே அடங்கும். இதற்கு முந்தைய சீசனில் 269 ரன்கள் அடித்துள்ளார்.
"ரிஷப் பன்ட் தனது கேப்டன் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளார் என்பதை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் (LSG) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, மேலும் இந்த கோரிக்கையை உரிமையாளர் உடனடியாக ஏற்றுக்கொண்டுள்ளார்," என்று LSG தனது அறிக்கையில் உறுதிப்படுத்தியது.
இது குறித்து பேசிய LSG கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடி, "ரிஷப் இந்தக் கோரிக்கையுடன் ஃபிராஞ்சைசியை அணுகினார், அதை நாங்கள் மரியாதையுடன் ஏற்றுக்கொண்டோம். இத்தகைய முடிவுகள் எளிதல்ல. கேப்டனாக ரிஷப் அளித்த பங்களிப்பிற்கு நாங்கள் நன்றியுள்ளவர்கள். தற்போது எங்கள் கவனம் சிறந்த தரத்தை அடைய மறுசீரமைப்பு மற்றும் மறுசீரமைப்பின் மீது உள்ளது," என்றார்.


Click it and Unblock the Notifications

