ரன்களை குவித்த பந்த்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான தொடரில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார் விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான ரிஷப் பந்த். கடந்த மாதத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் தொடர்ந்து 36, 97, 23 மற்றும் அவுட்டாகாமல் 89 ரன்களை குவித்திருந்தார்.
91 ரன்கள் குவிப்பு
இந்நிலையில் தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் முதல் இன்னிங்சில் 91 ரன்களை குவித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை இந்திய அணிக்காக அவர் அளித்து வருகிறார். சிறப்பான விக்கெட் கீப்பிங்கையும் மேற்கொண்டு வருகிறார்.
வென்றுள்ள ரிஷப் பந்த்
இந்நிலையில் கடந்த மாதத்திற்கான ஐசிசி மாத வீரர் விருதை தற்போது தட்டி சென்றுள்ளார் ரிஷப் பந்த். கடந்த மாதத்தில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகளில் சிறப்பான ஆட்டங்களை அளித்ததற்கான அவருக்கு இந்த விருது தற்போது வழங்கப்படுகிறது.
சிறப்பான வீரருக்கு விருது
ஐசிசி மாத வீரர் விருது கடந்த மாதத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ஒவ்வொரு மாதத்திலும் சிறப்பாக விளையாடும் வீரர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ஐசிசி இந்த விருதை அடுத்த மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமை அறிவிக்கவுள்ளதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது ரிஷப் பந்திற்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.