
இந்திய அணிக்கு வாய்ப்பு
டெஸ்ட் தொடரை இழப்பதை தடுக்கவும், தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வரவும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்திய அணிக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது.

தேறினார் பும்ரா
இந்த நிலையில், அணியில் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, காயம் காரணமாக இரண்டு டெஸ்ட்களில் விளையாடாமல் இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தற்போது உடல்நிலை தேறியுள்ளார்.

வலுபெறும் பந்துவீச்சு
இரண்டாவது டெஸ்டிலேயே அவர் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பும்ரா வரும் பட்டத்தில், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவுக்கு அடுத்த டெஸ்டில் வாய்ப்பு இருக்காது. பும்ராவின் வருகையில், இந்தியாவின் வேகப்பந்து வீச்சு வலுபெறும்.

பந்த்துக்கு வாய்ப்பு
இரண்டு டெஸ்ட்களில் அனைத்து பேட்ஸ்மேன்களும் தோல்வியடைந்திருந்தாலும், அடுத்த டெஸ்டில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டெல்லியைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த்துக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications