For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி முகத்துக்கு நேராக பேசக் கூடியவர்.. நீங்க என்ன நினைப்பிங்கனு யோசிக்க மாட்டாரு.. உத்தப்பா கருத்து

மும்பை : இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பிடித்திருக்கக் கூடியவர் நம் மகேந்திர சிங் தோனி. வரலாற்று சாதனைகளை படைக்கக்கூடிய சில வீரர்களுக்கு சில பிரத்தியேக குணங்கள் இருக்கும்.

அந்த குணங்கள் தான் அவர்களை மற்ற வீரர்களிடமிருந்து வேறுபடுத்தி சாதனை படைக்க காரணமாகவும் அமையும். அப்படி தோனியிடம் பல நல்ல பழக்கங்கள் இருக்கிறது.

கிரிக்கெட்டை வாழ்க்கையுடன் ஒப்பிட்டு எதிர்கொள்வது தான் தோனியின் ஸ்டைல் .2021 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை வென்றது ஒரு தனி கதை தான்.

தோனியின் ஐடியா

தோனியின் ஐடியா

சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுரேஷ் ரெய்னா அந்த சீசனில் தொடர்ந்து சொதப்பினார். இதனால் தோனி எடுத்த ஒரு முடிவு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. உத்தப்பாவை அணியில் சேர்த்த தோனி, இங்கிலாந்து வீரர் மொயின் அலியை ரெய்னா இடத்தில் மூன்றாவது வீரராக களம் இறக்கி ஆச்சரியத்தை கொடுத்தார்.

ராபின் உத்தப்பா விளக்கம்

ராபின் உத்தப்பா விளக்கம்

தோனியின் இந்த நகர்வு சிஎஸ்கே அணிக்கு பிளாக்பஸ்டர் முடிவாக மாறியது. இது போன்ற யுக்திகளை கையாள்வதில் தோனி வல்லவர். இந்த நிலையில் தோனியிடம் ஒரு சிறந்த குணம் இருப்பதாக ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் தோனி எப்போதுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர். உண்மையை சொல்ல அவர் எப்போதும் தயங்க மாட்டார். அந்த உண்மை உங்களை காயப்படுத்தினாலும் சரி.

நான் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்த போது தோனி திடீரென்று என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

முகத்திற்கு நேராக பேசுவார்

முகத்திற்கு நேராக பேசுவார்

அப்போது தாம் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து என்னால் கூற முடியாது. பிளேயிங் லெவனில் உன்னை சேர்ப்பது குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. நீ விளையாடுவாயா? இல்லையா? என்பது குறித்து நான் உன்னிடம் தெரிவிக்கிறேன் என்று தோனி என்னிடம் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகள் வெற்றிகரமான வீரராக வலம் வந்த என்னிடம் முகத்துக்கு நேராக தோனி கூறியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இப்படி முகத்துக்கு நேராக உண்மையை யாரும் பேச மாட்டார்கள்.

பழையதை மறக்காதவர்

பழையதை மறக்காதவர்

நான் சென்னை அணியில் முதல்முறையாக விளையாடிய போது அனைவரும் தோனி பாய் என்று கூறினார்கள். எனக்கு தோனியை முன்பே தெரியும் என்பதால் அவரிடம் சென்று நானும் உன்னை பாய் என்று அழைக்கணுமா என்று கேட்டேன். அதற்கு உனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி என்னை அழைத்து பேசு. அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீ என்னை மஹி என்று கூப்பிடு என்று தோனி சொன்னதாக ராபின் உத்தப்பா பேட்டியில் கூறியிருக்கிறார்.

Story first published: Saturday, March 18, 2023, 20:47 [IST]
Other articles published on Mar 18, 2023
English summary
Robin uthappa says Dhoni Wont Hesitate to speak the truth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+