
தோனியின் ஐடியா
சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுரேஷ் ரெய்னா அந்த சீசனில் தொடர்ந்து சொதப்பினார். இதனால் தோனி எடுத்த ஒரு முடிவு சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. உத்தப்பாவை அணியில் சேர்த்த தோனி, இங்கிலாந்து வீரர் மொயின் அலியை ரெய்னா இடத்தில் மூன்றாவது வீரராக களம் இறக்கி ஆச்சரியத்தை கொடுத்தார்.

ராபின் உத்தப்பா விளக்கம்
தோனியின் இந்த நகர்வு சிஎஸ்கே அணிக்கு பிளாக்பஸ்டர் முடிவாக மாறியது. இது போன்ற யுக்திகளை கையாள்வதில் தோனி வல்லவர். இந்த நிலையில் தோனியிடம் ஒரு சிறந்த குணம் இருப்பதாக ராபின் உத்தப்பா பாராட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் தோனி எப்போதுமே முகத்திற்கு நேராக பேசக்கூடியவர். உண்மையை சொல்ல அவர் எப்போதும் தயங்க மாட்டார். அந்த உண்மை உங்களை காயப்படுத்தினாலும் சரி.
நான் சிஎஸ்கே அணிக்காக ஒப்பந்தம் செய்த போது தோனி திடீரென்று என்னை தொடர்பு கொண்டு பேசினார்.

முகத்திற்கு நேராக பேசுவார்
அப்போது தாம் அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்பது குறித்து என்னால் கூற முடியாது. பிளேயிங் லெவனில் உன்னை சேர்ப்பது குறித்து நான் இதுவரை யோசிக்கவில்லை. நீ விளையாடுவாயா? இல்லையா? என்பது குறித்து நான் உன்னிடம் தெரிவிக்கிறேன் என்று தோனி என்னிடம் வெளிப்படையாகவே தெரிவித்தார். ஐபிஎல் தொடரில் 13 ஆண்டுகள் வெற்றிகரமான வீரராக வலம் வந்த என்னிடம் முகத்துக்கு நேராக தோனி கூறியது என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. இப்படி முகத்துக்கு நேராக உண்மையை யாரும் பேச மாட்டார்கள்.

பழையதை மறக்காதவர்
நான் சென்னை அணியில் முதல்முறையாக விளையாடிய போது அனைவரும் தோனி பாய் என்று கூறினார்கள். எனக்கு தோனியை முன்பே தெரியும் என்பதால் அவரிடம் சென்று நானும் உன்னை பாய் என்று அழைக்கணுமா என்று கேட்டேன். அதற்கு உனக்கு எப்படி தோன்றுகிறதோ அப்படி என்னை அழைத்து பேசு. அதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நீ என்னை மஹி என்று கூப்பிடு என்று தோனி சொன்னதாக ராபின் உத்தப்பா பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











