
ஏமாற்றம்
இதனையடுத்து தீபக் சாஹர் வீசிய முதல் ஓவரில் பந்து நன்றாக ஸ்விங் ஆனது. முதலில் கெயில் மெயர்ஸ்க்கு நடுவர் எல்.பி. டபிள்யூ கொடுத்தார். ஆனால் மெயர்ஸ் மறு ஆய்வு செய்ததில் பந்து ஸ்டம்பை மிஸ் செய்தது தெரியவந்தது. இதனால் இந்திய வீரர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரோகித் சேட்டை
அதே ஓவரில் மீண்டும் அதே போன்று சாஹர் பந்தை ஸ்விங் செய்தார். பந்து பேட்டில் உரசி செல்ல அதனை இஷான் கிஷன் கேட்ச் பிடித்தார். ஆனால் நடுவர் இதற்கு அவுட் தர மறுத்துவிட்டார். இதனால் கடுப்பான ரோகித் சர்மா, நடுவரை கலாய்க்கும் தோரனையில் ரிவியூ கேட்டார்.

மெயர்ஸ் அவுட்
மூன்றாம் நடுவரின் மறு ஆய்வில் பந்து பேட்டில் பட்டது தெரியவந்தது. இதனையடுத்து மெயர்ஸ் ஆட்டமிழந்தார். கேப்டன் ரோகித் சர்மா, டிஆர்எஸ் தொழில் நுட்பத்தை சரியாக பயன்படுத்துவதாக ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். தோனியை போல், ரோகித்தும் செயல்படுவதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தோனி வழியில்
ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் தொடரில் 4 முறை டி.ஆர்.எஸ். முறையை சரியாக பயன்படுத்தி ரோகித் சர்மா வெற்றி கண்டார். ரோகித்தின் அணுகு முறை 99.9 சதவீதம் சரியாக இருப்பதாக கவாஸ்கர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது தீபக் சாஹர் காயம் காரணமாக வெளியேறியதால் ரோகித் சர்மாவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











