
குறைந்த ரன் வேகம்
இன்றைய ஆடுகளம் கொஞ்சம் கூட வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக செயல்பட வில்லை. இதன் காரணமாக முகமது ஷமி, சிராஜ் ஆகியோர் எல்லாம் ஸ்டம்பை அதிகளவு நோக்கி பந்துவீசினார்கள். இந்த தருணத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் வந்த உடன் ஆஸ்திரேலிய அணியின் ரன் அடிக்கும் வேகம் குறைந்தது.

நோ பால்
இந்த நிலையில் ஆட்டத்தின் 34.5வது ஓவரில் அக்சர் பட்டேல் பந்துவீசும் போது, நடுவர் உடனே நோ பால் கொடுத்தார். அக்சர் பட்டேல் கோட்டிற்கு உள்ளே வைத்து சரியாக பந்துவீசிய நிலையில் ஏன் நோ பால் வழங்கப்பட்டது என்று வீரர்களே குழப்பம் அடைந்தனர்.

ரோகித் தவறு
உடனே அப்போது தான் தெரிந்தது. பவுண்டரி லைனில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக ஃபீல்டர்கள் நிறுத்தப்பட்டது தெரியவந்தது. அதற்காக தான் நோ பால் வழங்கப்பட்டது. பொதுவாக முதல் 10 ஓவருக்கு பிறகு, 40வது ஓவர் வரை பவுண்டரி லைனில் 4 ஃபீல்டர்கள் தான் நிற்க வைக்கப்பட வேண்டும்.

சிக்சர்
அப்படி கூடுதலாக நிற்க வைக்கப்பட்டதால் அது நோ பாலாகும். இதனை பயன்படுத்தி கொண்ட ஆஸ்திரேலிய வீரர் அலெக்ஸ் கெரி தூக்கி சிக்சர் அடித்து அசத்தினார். இதன் காரணமாக ரோகித் சர்மாவின் அலட்சியத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு கூடுதலாக 7 ரன்கள் கிடைத்தது. இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்து என்பதை பொறுத்தி இருந்த தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











