
கேப்டன்சி சர்ச்சை
விராட் கோலி பதவி விலகிய போது முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டார். அதில், இனி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளை வழிநடத்துவதில் முழு கவனம் செலுத்துவேன் எனக்கூறினார். ஆனால் அதற்கு மாறான முடிவை தான் பிசிசிஐ எடுத்தது. ஒருநாள் அணிக்கும் ரோகித் சர்மாவை நியமித்தது. இதனால் விராட் கோலி அதிருப்தியில் இருப்பதாக தெரிகிறது. மேலும் ரசிகர்களுடம் கோபத்தில் கொந்தளித்துள்ளனர்.

மனம் திறந்த ரோகித்
இந்நிலையில் கேப்டன்சி சர்ச்சை குறித்து ரோகித் சர்மா மனம் திறந்துள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், இந்திய அணிக்காக நாம் கிரிக்கெட் விளையாடும் போது, அதிகப்படியான அழுத்தங்கள் இருந்துக்கொண்டே தான் இருக்கும். ரசிகர்களிடம் இருந்து விமர்சனங்கள் நல்லபடியாகவும் வரலாம் அல்லது மோசமாகவும் வரலாம். அனால் என்னை பொறுத்தவரை ஒரு கிரிக்கெட் வீரர் தனது முழு கவனத்தையும் ஆட்டத்தின் மீது தான் செலுத்த வேண்டும்.

முதன்மை விஷயம்
ஆட்டத்தில் கவனத்தை செலுத்தவதை விடுத்து மக்கள் கூறும் கருத்துக்களை எல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ஏனென்றால் அவற்றை எப்போதுமே நிறுத்த முடியாது.
இதனை நான் ஏற்கனவே பல முறை கூறியுள்ளேன். தற்போது உள்ள சர்ச்சைகளுக்கும் இதையே தான் சொல்ல விரும்புகிறேன்.
Recommended Video

அழுத்தம் ஏற்படலாம்.
இந்திய அணியின் வீரர்களுக்கும் இதையே தான் நான் கூற விரும்புகிறேன். பெரும் தொடர்களில் விளையாடும் போது, அதிக அழுத்தங்கள் ஏற்படலாம். பலரும் பலவிதமாக கூறிக்கொண்டு தான் இருப்பார்கள். எங்களுக்குள் நாங்கள் எப்படி ஒற்றுமையாக இருக்கிறோம் என்பது தான் முக்கியம். நமது கைகளில் என்ன இருக்கின்றதோ, அதனை வைத்து எப்படி வெற்றி பெற வேண்டும் என்பதை பற்றி தான் நினைக்க வேண்டும் என ரோகித் சர்மா கூறியுள்ளார். எனினும் இதுகுறித்து விராட் கோலி இதுவரை வாய்த்திறக்கவில்லை


Click it and Unblock the Notifications