
தோல்வி
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 19.4 ஓவர்களில் இந்திய அணி 138 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதனை தொடர்ந்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 19.2 ஓவர்களில் 141/ ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு ஆக்ரோஷமான பேட்டிங் முறையே காரணமாக பார்க்கப்படுகிறது.

பிரச்சினை என்ன
பந்துவீச்சாளர்களுக்கு பிட்ச் சாதகமாக உள்ளது என்று தெரிந்தும், முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்ட வேண்டும் என ரோகித் திட்டமிட்டார். அதன்படி அடுத்தடுத்து வந்த பேட்ஸ்மேன்களும் நினைக்க, சொற்ப ரன்களுக்கு நடையை கட்டினர். இதனால் இனியாவது பிட்ச்-ன் தன்மையை உணர்ந்து அதிரடி காட்ட வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ரோகித் சர்மா விளக்கம்
இந்நிலையில் இதற்கு ரோகித் சர்மா பதிலளித்துள்ளார். அதில், எங்கள் பேட்டிங்கில் சில விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொண்டு மாற்ற வேண்டியுள்ளது. ஆனால் நாங்கள் கையில் எடுத்துள்ள அதிரடி பேட்டிங் முறையை மாற்றிக்கொள்ள முடியாது. ஏனென்றால் அதில் நாங்கள் எதாவது சாதிக்க விரும்புகிறோம்.

தடலாடி விளக்கம்
ஒரே ஒரு தோல்வி மட்டுமே வந்துள்ளது. அதனை கண்டு எந்தவித பதற்றமும் கொள்ளக்கூடாது. அணி வீரர்களுக்கு ஒன்றே ஒன்றை மட்டும் தெளிவாக கூறிக்கொள்கிறேன். ஒரே ஒரு தோல்வியை பார்த்து நாம் எதையும் மாற்றிக்கொள்ளக்கூடாது. அதே முனைப்புடன் அதிரடியாக பேட்டிங் செய்ய வேண்டும் என தடாலடியாக கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











