
விராட் கோலி ஃபார்ம்
இந்திய அணியின் தோல்விக்கு டாப் ஆர்டர் முழுவதும் சொதப்பியதே காரணம். எனினும் விராட் கோலி மீதுதான் அதிக விமர்சனங்கள் குவிந்து வருகிறது. ரோகித் சர்மா (0), ஷிகர் தவான் (6), ரிஷப் பண்ட் (0) என அடுத்தடுத்து வெளியேறியதால், கோலி தான் அணியை காப்பாற்ற வேண்டிய சூழலில் இருந்தார். அதற்கேற்றார் போல அடுத்தடுத்து பவுண்டரிகள் பறந்தன.

மீண்டும் ஒரு ஏமாற்றம்
ஆட்டத்தை தொடங்கியவுடனே ஆஃப் ட்ரைவ், ஆன் ட்ரைவ், கவர் ட்ரைவ் என மிகவும் புத்துணர்ச்சியுடன் ஆடிய விராட் கோலி, விக்கெட்கள் சரிவதை கண்டு பதற்றமடைந்தார். இதனால் 16 ரன்களுக்கெல்லாம் பட்லரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் கோலி சதமடிப்பார் என காத்திருந்த ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு ஏமாற்றம் கிடைத்தது.

ரோகித் சர்மா பதிலடி
இந்நிலையில் கோலிக்கு தோள்கொடுத்து ரோகித் பேசியுள்ளார். அதில், கோலி குறித்து இவ்வளவு விமர்சனங்கள் ஏன் வருகிறது என்பது தான் எனக்கு புரியவில்லை. ஒரு சிறந்த வீரரின் பயணத்தில் ஏற்ற தாழ்வுகள் இருக்க தான் செய்யும். அவர் எத்தனை ரன்கள், சதங்கள் அடித்துள்ளார்கள் என்பதை பாருங்கள். எத்தனை போட்டியை வென்றுகொடுத்த சிறந்த பேட்ஸ்மேன் அவர்.

ஒரே ஒரு இன்னிங்ஸ் தான்
நீண்ட வருடங்களாக சாதனைகளை புரிந்து வரும் விராட் கோலி, மீண்டும் தன்னை நிரூபித்துக் காட்ட வேண்டிய அவசியம் கிடையாது. ஒரு சிறந்த வீரருக்கு ஒன்று அல்லது 2 சிறந்த இன்னிங்ஸ்கள் போதும். அவர் மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுத்துவிடுவார். கோலி மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நல்ல வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துக்கொண்டு தான் இருக்கும். எனவே விமர்சனங்கள் செய்யாதீர்கள் என ரோகித் சர்மா கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











