வங்கதேச தொடர்
இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் போன்றவர்கள் ஓய்வில் இருந்து திரும்புகின்றனர். 2023ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு இன்னும் ஒரு வருடம் கூட இல்லை என்பதால் தற்போது இருந்தே முழு வீச்சில் தயாராக முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதனால் சிறந்த ப்ளேயிங் 11களை முயற்சி செய்து பார்ப்பார்கள்.
ப்ளேயிங் 11 குழப்பம்
இந்நிலையில் ப்ளேயிங் 11ல் மிடில் ஆர்டரில் பெரும் குழப்பம் உருவாகியுள்ளது. ஓப்பனிங்கில் கேப்டன் ரோகித் சர்மா இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட்டிற்கு மட்டுமே தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் ஷிகர் தவான் தான் மற்றொரு இடத்திற்கு முதன்மை தேர்வாக இருக்கிறார். துணைக்கேப்டனான கே.எல்.ராகுல் அணியில் தேர்வு செய்தே ஆக வேண்டும் என்பதால் அவர் மிடில் ஆர்டருக்கு செல்வார் என தெரிகிறது.
ரிஷப் பண்ட்-ன் வாய்ப்பு
ஆனால் அதில் தான் குழப்பமே உள்ளது. முதல் விக்கெட்டிற்கு விராட் கோலி விளையாடினால், 2வது விக்கெட்டிற்கு கே.எல்.ராகுல் விளையாடுவார். 3வது விக்கெட்டிற்கு ஸ்ரேயாஸ் ஐயர் நிச்சயம் சேர்க்கப்பட வேண்டும். ஏனென்றால் கடைசியாக 9 இன்னிங்ஸில் 6 முறை அரைசதம் அடித்துள்ளார். ஆனால் ராகுல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருக்குமே வாய்ப்பு கொடுத்தால் ரிஷப் பண்ட் அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான்.
பவுலிங் தேர்வுகள்
ஏனென்றால் ரிஷப் பண்ட்-ஐயும் அணியில் சேர்த்தால் மொத்தமாக 6 ப்யூர் பேட்ஸ்மேன்களாக இருப்பார்கள். இதனால் 5 பவுலர்களுடன் மட்டுமே களமிறங்க வேண்டியிருக்கும். நியூசிலாந்து தொடரில் 5 பவுலர்களுடன் சென்ற போது, இந்தியா மோசமாக அடி வாங்கியதை அனைவரும் அறிவோம். எனவே பண்ட்-ன் இடத்திற்கு ஒரு ஆல்ரவுண்டரை கொண்டு வர யோசித்து வருகிறார்கள். இதனால் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் ஆகியோரின் இடங்களை நிரப்ப ரோகித் சிரமப்பட்டு வருகிறார்.