
சமநிலையில் அணிகள்
இந்தியா -ஆஸ்திரேலியா இடையில் தற்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரின் இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்று சமநிலையில் உள்ளன. இந்நிலையில் இரு அணிகளுக்கிடையில் வரும் வியாழக்கிழமை 3வது போட்டி துவங்கவுள்ளது.

திணறிய ஆஸ்திரேலியா
முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியின் பௌலிங் அட்டாக்கை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி தடுமாறியது. இதேபோல முதலில் ஆடப்பட்ட பகலிரவு போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸ் தவிர்த்து பேட்டிங்கிலும் இந்திய அணி சிறப்பாகவே தனது திறமையை வெளிப்படுத்தியது.

சிறப்பான இந்தியாவின் வெற்றி
குறிப்பாக இரண்டாவது போட்டியில் முன்னணி வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்கள் யாரும் இல்லாமலேயே சிறப்பான வெற்றியை இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெற்றுள்ளது. இந்நலையில் 3வது போட்டியில் தற்போது ரோகித் சர்மா இணையவுள்ள நிலையில் போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சவாலை எதிர்கொள்ள தயார்
இந்நிலையில் உலகளவில் ரோகித் சர்மா சிறப்பான வீரர் என்று பாராட்டு தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய அணியின் ஆப்-ஸ்பின்னர் நாதன் லியான், அதனால் ஆஸ்திரேலிய பௌலர்களுக்கு மிகப்பெரிய சவாலாக ரோகித் சர்மா இருப்பார் என்றும் ஆனால் அந்த சவாலை எதிர்கொள்ள விருப்பத்துடன் தாங்கள் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications