
குற்றச்சாட்டுகள்
இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட விருப்பம் தெரிவித்தும் அதனை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ இது போன்ற முடிவை எடுத்துள்ளது. டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனி தனி கேப்டன் இருந்தால் தேவையின்றி பிரச்சினை ஏற்படும் என்பதால் கோலியை நீக்கியதாக பிசிசிஐ விளக்கமளித்தது. எனினும் அதனை ஏற்காத ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். மற்றொரு புறம் டிராவிட் தான் கோலியின் பதவி நீக்கத்திற்கு காரணம் என்றும் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ரோகித் பேச்சு
இந்நிலையில் ராகுல் டிராவிட் குறித்து இந்திய அணியின் புதிய கேப்டன் ரோகித் சர்மா பேசியுள்ளார். ராகுல் டிராவிட்டுடன் 3 போட்டிகளில் தான் பணியாற்றியுள்ளேன். ஆனால் அவ்வளவு அற்புதமாக இருந்தது. கடினமான சூழல்களில் டிராவிட் எப்படி விளையாடியுள்ளார் என்பதை எங்களால் சுலபமாக உணர முடிகிறது. டிராவிட்டுடன் இருந்தால் எந்தவித அழுத்தமும் இல்லாதது போன்று உள்ளது.

எங்களின் அதிர்ஷ்டம்
ஒரு அணியில் வீரர்கள் அழுத்தங்கள் இன்றி சரியான மனநிலையுடன் இருக்க வேண்டியது அவசியம். அப்போது தான் ஆட்டம் சிறப்பாக இருக்கும். அது டிராவிட்டால் எங்களுக்கு கிடைக்கிறது. இந்த சிறிய காலத்திலேயே அவருடன் நிறைய ஆலோசனைகளை செய்துள்ளேன். அதில் பலவற்றை கற்றுக்கொண்டுள்ளேன். இது எங்களுக்கு அதிர்ஷ்டம் என்று கூறலாம் என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
Recommended Video

முதல் சுற்றுப்பயணம்
இந்திய அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் முழு நேர ரோகித் சர்மா எதிர்கொள்ளும் முதல் தொடராகும். ஒருநாள் தொடர்களில் ரோகித் சர்மா - ராகுல் டிராவிட் ஆகியோரின் செயல்பாடுகளை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.


Click it and Unblock the Notifications