சிகப்பு நிற ஆடை
இதையடுத்து, பெங்களூரு அணியில் தொடக்க வீரர்களாக பார்த்தீவ் படேலும், கேப்டன் கோலியும் களம் கண்டனர். பெங்களூரு அணிக்கென்று எப்போதும் சிகப்பு நிற ஆடை உண்டு.
|
ஆடை நிறம் மாறியது
அனைத்து போட்டிகளிலும் அவர்கள் அந்த வண்ண ஆடை அணிந்தே விளையாடினர். ஆனால்.... இன்றைய போட்டியில் அதற்கு மாறாக... பச்சை நிற ஆடை அணிந்து பெங்களூரு அணியினர் களம் இறங்கி உள்ளனர்.
பச்சை நிற ஆடை
பசுமையை உணர்த்தும் வகையிலும், பிளாஸ்டிக் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் இன்று ஒருநாள் பச்சை வண்ண ஆடை அணிந்து விளையாட உள்ளதாக கேப்டன் கோலி தெரிவித்தார். ஆட்டம் தொடங்கும் முன்பு, இரு அணி வீரர்களும் செடிகளையும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டனர்.
வெற்றி பெறுமா?
சிகப்பு தொப்பி, காலில் சிகப்பு காலணி, பச்சை நிற ஆடை என்று பெங்களூரு அணி வீரர்கள் களம் கண்டுள்ளனர். ஆடை மாற்றமாவது...அந்த அணிக்கு வெற்றியை தருமா என்பது தெரியவில்லை.