ராஜஸ்தான் மண்ணில் தோனிக்கு பெரும் வரவேற்பு.. பப்ளிசிட்டி ஸ்டன்ட் என கதறும் ஹேட்டர்ஸ்!!
Recommended Video

ஜெய்ப்பூர் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 2019 ஐபிஎல் தொடரின் 25வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ஜெய்ப்பூரில் சந்திக்க உள்ளது.
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் அணியின் கோட்டை என்றாலும், சென்னை அணி வீரர்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, அவர்களுக்கு பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தோனியைப் பார்க்க குழுமி இருந்தனர். அவர்களில் பலர் "தோனி, தோனி" என உற்சாகக் குரல் எழுப்பி தோனியை வரவேற்றனர். பலர் வீரர்களை புகைப்படம் எடுக்க தயாராக நின்று இருந்தனர். எனினும், பாதுகாப்பு கருதி வீரர்கள் வேகமாக சென்று விட்டனர்.

எங்கேயும் சிஎஸ்கே
இந்த வீடியோ காட்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் தன் ட்விட்டர் கணக்கில் பகிர்ந்துள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு சென்னை அணியின் ரசிகர்கள் அனைத்து அணிகளின் சொந்த மைதானங்களிலும் நிறைந்து காணப்படுகின்றனர்.

வரவேற்பு
ராஜஸ்தான் விமான நிலையத்திலேயே சென்னை அணிக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், போட்டியின் போதும் தோனி ரசிகர்கள் மைதானத்தை நிரப்புவார்கள் என எதிர்பார்க்கலாம்.
பப்ளிசிட்டி ஸ்டன்ட்
சென்னை சூப்பர் கிங்ஸ் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பப்ளிசிட்டி ஸ்டன்ட் என "தோனி மற்றும் சிஎஸ்கே ஹேட்டர்ஸ்" சிலர் கூறி வருகின்றனர். வயிற்றெரிச்சல் படவேண்டாம் என தோனி ரசிகர்கள் அவர்களை கிண்டல் செய்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications