மஞ்சள் நிறம்
டெல்லி, ஹைதராபாத், மும்பை என எங்கு சென்றாலும் மஞ்சள் நிற சிஎஸ்கே உடை அணிந்து சென்னை ரசிகர்கள் ஆரவாரம் செய்து வருவது குறித்து பேசிய பிராவோ, அதில் பலர் சிஎஸ்கே ரசிகர்கள் இல்லை. தோனி ரசிகர்கள் என கூறினார்.
சிறப்பாக ஆடும் அணி
சென்னை அணி ஆடும் போட்டிகள் மட்டுமல்லாமல், பயிற்சியின் போது கூட 10,000க்கும் அதிகமான ரசிகர்கள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கூடினர். சிறப்பாக ஆடி வரும் அணி என்பதால் தான் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகிறார்கள் என கூறுகிறார் பிராவோ.
காரணம் என்ன?
இதனால், சென்னை அணி எந்த இடத்தில் ஆடினாலும், அதை தன் சொந்த மைதானமாக மாற்றி விடுகிறது. கடந்த சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் தான் இந்தப் போக்கு அதிகரித்துள்ளது. அதற்கு முக்கிய காரணம், சென்னை அணி இரு ஆண்டுகள் தடைக்குப் பின் ஐபிஎல் தொடரில் ஆடி கோப்பையை வென்றது தான் என கூறப்படுகிறது.
அடுத்த போட்டி
சென்னை அணி இதுவரை தான் ஆடிய ஆறு போட்டிகளில் ஐந்தில் வென்று புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. தன் அடுத்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இன்று சந்திக்க உள்ளது சென்னை.