துவக்கம் மோசம்
இந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 151 ரன்கள் குவித்தது. அடுத்து ஆடத் துவங்கிய சென்னை அணிக்கு வாட்சன் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். இந்த நிலையில் 2வது ஓவரில் ரெய்னா உனட்கட் ஓவரை சந்தித்தார்.
ஓட முயன்ற ரெய்னா
அந்த ஓவரின் 5வது பந்தை ரெய்னா, தனக்கு பின் திசையில், ராஜஸ்தான் வீரர் ஆர்ச்சர் அருகே தட்டிவிட்டார். பின்னர் ரன் ஓட முயன்ற ரெய்னா முதலில் பந்து எங்கே செல்கிறது என திரும்பிப் பார்த்தார்.
மீண்டும் பார்த்தார்
அத்தோடு அவர் முழுமூச்சில் ஓடத் துவங்கி இருந்தால் பிரச்சனை ஏற்பட்டு இருக்காது. ஆனால், ரெய்னா ஒரு அடி எடுத்து வைத்து விட்டு மீண்டும் பின்னே திரும்பிப் பார்த்தார். பந்தை ஆர்ச்சர் எடுக்கப் போவதை கண்ட உடன், வேகமெடுத்தார் ரெய்னா.
துல்லியமான த்ரோ
ஆனால், எதிர்முனை கிரீஸை தொடுவதற்குள், ஆர்ச்சர் அடித்த துல்லியமான த்ரோவில் ரன் அவுட் செய்யப்பட்டார். ரெய்னா இரண்டாவது முறை அரை வினாடி திரும்பிப் பார்த்ததால், தன் வேகத்தை இழந்து ஆட்டமிழந்தார்.
பந்தைப் பார்க்கிறேன்
ஒரு அனுபவ வீரர் இப்படி "பந்தைப் பார்க்கிறேன்" என ரன் அவுட் ஆனது சென்னை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது. முதல் ஓவரில் வாட்சன், இரண்டாவது ஓவரில் ரெய்னா என முன்னணி வீரர்களை இழந்து தவித்தது சென்னை.