
இந்தியா- பாக் மோதல்
பரமவைரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மோதும் இப்போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவும், பாகிஸ்தானும் பைனலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு மோதுகின்றன.

சூதாட்டம்
இந்தியா- பாகிஸ்தான் இறுதிப் போட்டியை முன்வைத்து சூதாட்ட தரகர்கள் காட்டில் அடைமழைதான். ஒருவர் இந்தியா வெற்றி பெறும் என்று ரூ.100 பெட் கட்டுகிறார்... அப்போது இந்தியா வெற்றி பெற்றால் ரூ.147 கிடைக்கும். ஒரு வேளை பாகிஸ்தான் வெற்றி பெற்றால் மற்றவருக்கு ரூ.300 கிடைக்கும்.

ரூ2000 கோடி சூதாட்டம்
சூதாட்ட தரகர்கள் பாகிஸ்தான் மீது அதிக தொகை பெட் கட்டுவதால் இந்தியா வெற்றி பெறுவதற்கான தில்லுமுல்லுகளும், இந்தியா மீது அதிக தொகை பெட் கட்டினால் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதற்கான மோசடிகளையும் பெட்டிங் மன்னர்கள் செய்வர். அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு என்ற அமைப்பு இந்திய- பாகிஸ்தான் போட்டியில் சுமார் ரூ.2,000 கோடி வரை சூதாட்டம் நடைபெறும் என்கிறது.

முழு கண்காணிப்பு
இதனால் இந்த பெட்டிங்கை தடுக்க கிரிக்கெட் வீர்ரகள் அனைவரும் முழு கண்காணிப்பில் உள்ளனர். ஒரு ஆண்டுக்கு சராசரியாக பெட்டிங்கில் மட்டும் ரூ.2 லட்சம் கோடி புழங்குகிறதாம். நாடு முழுவதும் பெட்டிங்கை தடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











